பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பாத்திமா பாபு வனிதாவை பற்றி பேசியதும் அரங்கமே அதிரும் அளவிற்கு அப்படியோரு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
BB Fathima Babu Speech : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்றவர் கமல்ஹாசன், எப்படி சென்றாரோ அப்படியே முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இவர் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கமல்ஹாசனுடன் சேர்ந்து உரையாடினார். அப்போது கமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து கேட்டார்.
பாத்திமா பாபு வனிதா குறித்து பேசியதாவது தன் குரல் உயர வேண்டும் என்பதற்காக அனைவரையும் மட்டம் தட்டி பேசி வருகிறார்.
கணவன் மற்றும் மகன்களுடன் பாத்திமா பாபு – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!
அவரை எதிர்த்து பேச முடியாதவர்களும் அவரை போலவே கேரக்டர் கொண்டவர்களும் அவருடன் கூட்டணி வைத்து கொண்டுள்ளனர் என கூறினார்.
பாத்திமா பாபு இப்படி கூறியதும் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் ஒலித்தது, இதில் இருந்தே வனிதா மீது மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என தெரிகிறது.
ஆனாலும் பிக் பாஸ் எப்படியும் 50 நாள் வரை வனிதாவை காப்பாற்றி விடுவார், கன்டன்ட் முக்கியம் மக்களே.