பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதும் அதன் பின்னணியும் என்ன என்பது அம்பலமாகியுள்ளது.
BB 1st Evicted Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த வாரம் நாமினேஷனில் மதுமிதா, மீரா மிதுன், கவின், சேரன், பாத்திமா பாபு, சரவணன், சாக்ஷி அகர்வால் என மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை யார் கன்டென்ட் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் இறுதி வரை இருப்பார்கள். இதனை நாம் முதல் இரண்டு சீசனிலேயே கண் கூடாக பார்த்து விட்டோம்.
கஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்
இந்த வார எவிக்ஷனில் இதுவரை நமக்கு கிடைத்த தகவலின் படி மதுமிதா அதிக ஓட்டுகள் பெற்று சேப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது, இதனை அனைவருமே ஏற்று கொள்வார்கள்.
மேலும் சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைந்த ஓட்டுகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது, அதற்கான காரணம் அவர் அரைகுறையாக கேட்டு விட்டு கேங்கில் மூட்டி விட்டு அது ரணக்கமாக மாறி விடுவது தான்.
கிட்டத்தட்ட அவர் அடுத்த ஜூலியை போல இருப்பதால் அவரை தான் ரசிகர்கள் வெளியேற்ற ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது கவினுடன் காதல் முளைத்து விட்டதால் எக்கசக்க கன்டென்ட் கிடைக்கும் என்பதால் ஒப்புக்கு சப்பான உள்ளே இருக்கும் பாத்திமாவை வெளியேற்றி விட திட்டம் போட்டுள்ளார்.
இதனால் இந்த வாரம் பாத்திமா பாபு தான் வெளியேறுவார் என்பது உறுதியாகியுள்ளது, இதற்கு கமல் ஹாசன் நீங்கள் மற்ற போட்டியாளர்களை ஆக்டிவாக இல்லை என்பதால் மக்கள் வெளியேற்றி இருக்கலாம் என சமாதானப்படுத்தி வழி அனுப்பி வைப்பார் எனவும் எதிர்பார்க்கலாம்.
பிக் பாஸின் ஆட்டத்தை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.