jayagopal
சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

Banner Jayagopal is arrested in krishnagiri – சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர். மேலும், முன்னணி நடிகர்களும் தங்கள் திரைப்படங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டனர்.

இந்தியன் 2 படத்தை நாங்கள் தயாரிக்கவே இல்லை – அதிர்ச்சியை கிளப்பிய லைகா நிறுவனத்தின் அறிவிப்பு

ஆனால், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜெயகோபாலை கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த போது தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.