Bala sent notice to Vikram :
பாலா தற்போது விக்ரமுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஆதித்ய வர்மா படத்தில் தான் எடுத்த காட்சிகள் ஒன்று கூட இருக்கக்கூடாது என்று விக்ரமுக்கு பாலா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
இதனால் மன வருத்தத்தில் இருந்த பாலா தற்போது விக்ரமுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஆதித்ய வர்மா படத்தில் தான் எடுத்த காட்சிகள் ஒன்று கூட இருக்கக்கூடாது என்று விக்ரமுக்கு பாலா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
இப்படத்தை குறுகிய கால படமாக முடித்து வெளியிடுவதாக படக்குழு சொல்லி இருந்தனர். தற்போது அதை பின்பற்றி முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.