Actor BhagyaRaj : சர்கார் படத்தின் கதை விவகாரத்தை அடுத்து திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குனர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீரத்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் வருண் ராஜேந்தர் என்ற உதவி இயக்குனர் சர்கார் படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வருண் ராஜேந்திரன் புகாரை ஏற்று கொண்டு எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் விசாரணை செய்தார். பின்னர் இரண்டு படத்தின் கதையும் ஒன்று தான் என கூறியிருந்தார்.
பின்னர் வருணும் முருகதாஸும் சமரசமாக பிரச்னையை முடித்து கொண்டனர். இந்நிலையில் தற்போது பாக்யராஜ் இந்த எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.