சித்ரா மேல எப்போதும் கஞ்சா வாடை வரும் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபல நடிகர்.

Bailwan Ranganathan About VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் சித்ரா. குறிப்பாக இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறி ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு பறந்து வந்த நிலையில் சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவிற்கு ஹேமந்த் தான் காரணம் என கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

ஹேமந்த் ஒரு பக்கம் சித்ராவின் தற்கொலை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார். அதேபோல் நடிகை ரேகா நாயர் சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். இப்படியான நிலையில் பயில்வான் ரங்கநாதன் நானும் சித்ராவும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் இணைந்து நடித்தபோது அவர் ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வந்தால் அவர் மீது கஞ்சா வாடை தான் வரும் என கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்தது பல ஆண் நண்பர்கள் இருந்தார்கள் என்பது எனக்கு அப்போதே தெரியும் என கூறியுள்ளார். இவருடைய இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.