சிறையில் இருந்ததால் முன்னணி நடிகர் ஒருவர் பாகுபலி பட வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
Bahubali Kattappa Character Secrets : தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி.
இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இப்படத்தில் கட்டப்பாவாக சத்யராஜ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல் அனைத்து நடிகர்களும் அவர்களின் வேலையை அழகாக செய்து முடித்திருப்பார்கள்.
ஆனால் முதல் முதலாக இப்படத்தில் கட்டப்பாவாக நடிக்க இருந்தது சத்யராஜ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய்தத் என்பவர் தான் நடிக்க இருந்துள்ளார்.
அடக்கடவுளே பாகுபலி ராணாவா இது? என்ன இப்படி ஆகிட்டாரு – ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
ஆனால் அவர் படம் தொடங்கிய சமயத்தில் மும்பை சிறையில் இருந்துள்ளார். அவரை வெளியே கொண்டு வர எஸ்எஸ் ராஜமவுலி எவ்வளவோ முயற்சி செய்தும் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.
இதனால் வேறு வழியில்லாமல் சத்யராஜை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்த தகவலை பாகுபலி படத்திற்கு கதை எழுதிய எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தையும் எழுத்தாளருமான ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கட்டப்பா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருந்தால் கூட இவ்வளவு அருமையாக இருந்திருக்குமா என தெரியாது. சத்யராஜ் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத் தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படமும் பாகுபலி படத்தைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.