குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்த கல்யாணி ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து வெளியேற என்ன காரணம் என்பதை கூறியுள்ளார்.
Baby Artist Kalyani Photos : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.
அதேபோல் பிரபுதேவாவின் நடிப்பில் 2001 ஆம் ஆண்டில் வெளியான அள்ளித்தந்த வானம் என்ற படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கல்யாணி.
அதன் பின்னர் அவர் விஜயகாந்த் படம் ரமணா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நாயகியாகவும் நடிக்க தொடங்கினார் ஆனால் தொடர்ந்து நடிக்காமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.
இதற்கான காரணம் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை என இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆம் பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்காக தனக்கு வாய்ப்பு வந்தது. எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் என் அம்மாவிடம் தான் பேசுவார்கள்.
பெரிய நடிகர்களின் படங்களின் வாய்ப்பு என்பது என் அம்மா மகிழ்ச்சி ஆகிவிடுவார். அவருக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதால் உடனே சரி என கூறி விடுவார்.
அதன் பின்னர் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். கால்சீட் அட்ஜஸ்ட்மெனட் ஆக இருக்கும் என என் அம்மா பேசுவார்.
ஆனால் அவர்கள் கேட்பது வேறு மாதிரியாக இருக்கும் அதனால் உடனே போனை துண்டித்து விட்டார். இதுபோன்ற சம்பவங்களால் நான் சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன் என கூறியுள்ளார்.
கல்யாணி தற்போது திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ