பாக்யா கொடுத்த அதிர்ச்சியால் கோபி கண் கலங்குகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த வாரம் இனியா ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரையை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ராமமூர்த்தி இந்த விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இனியாவை பார்ப்பதற்காக ஈஸ்வரி, பாக்கியா, எழில், செழியன் என எல்லோரும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

கோபி சரி நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க இனியாவை டிஸ்சார்ஜ் செய்து நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறேன் என சொல்ல பாக்கியா இனியா எங்க கூடத்தான் இருப்பா என சொல்கிறார். கோபி அதெல்லாம் முடியாது இனியா என் கூட தான் இருப்பா என சொல்ல அவகிட்டயே கேட்கலாம் என பாக்கியா கூறுகிறார்.

பிறகு இனியாவிடம் கேட்க பாக்யா உனக்காக நாங்கள் எல்லாரும் இருப்போம் என சொல்ல கோபி டாடி தான உனக்கு உயிர் என்னை விட்டு போயிடுவியா என கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் இனியா எடுக்கப் போகும் முடிவு என்ன என பரபரப்பான திருப்பங்களுடன் வரும் நாட்களில் சீரியல் ஒளிபரப்பாகும் என தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.