அப்பாவுக்கு பெரிய ஆப்பாக வைத்துள்ளார் இனியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியலாக இருந்து வருகிறது.
இனியா கோபியுடன் கிளம்பி போன் நிலையில் தாத்தாவும் ராதிகா வீட்டுக்கு கிளம்பி போய் ராதிகாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். வீட்டுக்கு போறேன் என சொன்ன இனியாவையும் கோபி தடுத்து நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ராதிகா கொடுத்த காபியை இனியா குடிக்காமல் இருக்க ராதிகா ஏன் குடிக்கல என கேட்க இனியா அமைதியாக இருக்க உன் கிட்ட தான் கேட்கிறேன் என சொல்ல உங்ககிட்ட பேச புடிக்கல என சத்தம் போடுகிறார்.
பிறகு கோபி வீட்டுக்கு வந்ததும் பஞ்சாயத்து நடக்க இனியா இப்ப சொல்லுங்க உங்களுக்கு நான் முக்கியமா? அவங்க முக்கியமா என கேட்டு கோபிக்கு பெரிய ஆப்பு வைத்துள்ளார்.
கோபி என்ன பதில் சொன்னாலும் அவருக்கு ஆப்பு தான் என்பதால் இது குறித்த எபிசோட் வேற லெவல்ல இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.