இனியாவை கூட்டிக்கொண்டு போன கோபிக்கு ஆப்பு வைக்க தாத்தா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியா செய்த தவறுக்காக பாக்கியா அறைய இனியா அப்பா தான் வேண்டும் என முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்பி கோபியுடன் ராதிகா வீட்டுக்கு சென்று விட்டாள். இப்படியான நிலையில் அடுத்ததாக ஈஸ்வரி இனியாவை இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க என சத்தம் போடுகிறார்.
தாத்தா ராமமூர்த்தி இனியாவை அழைத்து வருவதற்கு பதிலாக கோபிக்கு ஆப்பு வைக்க அதிரடி முடிவெடுத்துள்ளார். இனி நானும் இனியா இருக்க இடத்துல தான் இருக்க போறேன் என ராதிகா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார்.
கோபி இனியாவை அனுப்ப முடியாது என சொல்ல நான் கூட்டிட்டு போக வரல, அவளோட இருக்க வந்திருக்கேன் என சொல்லி ஆப்பு வைக்கிறார். இப்படியான ப்ரோமோ வீடியோ வெளியாக இதனை பார்த்த ரசிகர்கள் கோபிக்கு தரமான சம்பவம் இருக்கு என உற்சாகப்பட்டு வருகின்றனர்.