பாக்கியாவிடம் கையும் களவுமாக சிக்கிய கோபிக்கு மேலுமொரு ஆப்பு வைத்துள்ளார் எழில்.

Baakiyalakshmi Serial Episode Update 18.12.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா கடைத் திறப்பு விழாவுக்காக அனைவருக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறார். எழில் கண்டிப்பாக சீப் கெஸ்ட் வருவாங்க என சொல்லிவிட்டு அவர்களை பார்க்க செல்கிறார்.

நேராக ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் அவர்களை சந்தித்து தன்னுடைய அம்மாவின் புதிய பிசினஸ் தொடக்க விழாவிற்கு வருமாறு கோரிக்கை வைக்கிறார். இருவரும் கண்டிப்பாக வருகிறோம் என வாக்கு கொடுக்க எழில் மகிழ்ச்சியோடு அங்கிருந்து வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் இந்த உற்சாக தகவலைக் கூறுகிறார். இந்தப் பக்கம் கோபி ராதிகாவுடன் மருத்துவமனையில் இருக்கிறார். கண்டிப்பாக உங்களுடன்தான் இருப்பேன் என அவர்களிடம் வாக்கு கொடுக்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்து கோபியுடன் இனியா ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் அவர்கள் சீப் கெஸ்டாக வருகிறார்கள் என சொல்ல அவரும் பெரிதாக காதில் வாங்காமல் சென்று விடுகிறார். மறுநாள் காலையில் பிசினஸ் விசயமாக பெங்களூரு செல்ல வேண்டும் என பேக்குடன் வருகிறார். பங்ஷன் அன்னைக்கு கண்டிப்பா வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு நேராக ராதிகாவை பார்க்கவும் அவருடன் தங்கவும் மருத்துவமனைக்கு செல்கிறார்.

பாக்யா ராதிகாவிற்கு போன் செய்து கொண்டே இருக்க சுவிட்ச் ஆப் செய்து வருவதால் நேராக வீட்டிற்குச் சென்று போய் பார்க்க அவருக்கு அடிப்பட்டு இருப்பதை அவருடைய அம்மா சொல்கிறார். இந்தப்பக்கம் ராதிகா கோபியிடம் தங்களுடைய ஆபிசில் நடக்கும் பங்ஷனுக்கு ரஞ்சித் மற்றும் பிரியா ராமனை சிறப்பு விருந்தினராக வரவழைக்க வேண்டும் என கூறுகிறார். இதற்காக எழிலிடம் பேச அவர் போன் செய்ய முயற்சி செய்ய அவருடைய போன் ஆஃப் ஆகி விடுகிறது. பாக்கியாவும் எழிலும் மருத்துவமனைக்கு வந்தால் நாம மாட்டிக் கொள்வோம் என்பதால் நான் அவர்களை பேசி வர வைக்கிறேன் என கோபி வாக்குக் கொடுக்கிறார்.

பிறகு தன்னுடைய நண்பர் உதவியுடன் ரஞ்சித்தின் மேனேஜரைப் பார்த்து பேச அவர்கள் கண்டிப்பாக அந்த பங்ஷனுக்கு வருவார்கள் என வாக்கு கொடுத்து விடுகிறார். பிறகு இவர் மருத்துவமனைக்கு கிளம்பிச் செல்லும்போது பாக்கியா ராதிகாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அவரைப் பார்த்துப் பேசிவிட்டு வெளியே வரும்போது கோபியை பார்த்துவிடுகிறார். பெங்களூரு போறேன்னு சொன்னீங்க இங்கே எப்படி இருக்கீங்க என்று கேட்க என்னுடைய ஃப்ரெண்டுக்கு சீரியஸ்னு போன் வந்தது அதுதான் பிளைட் ஏறி வந்து விட்டேன் என கூறுகிறார். நீங்க கார்ல தானே போனீங்க எனக் கேட்க பெங்களூரில் இருக்கு அவசரமாக வந்துவிட்டேன் என சொல்கிறார்.

பிறகு அவர் ஒரு வழியாக பாக்கியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு ராதிகாவை பார்க்க சென்று விடுகிறார். ராதிகாவிடம் அவர்களிடம் பேசிய அவர்கள் கண்டிப்பாக உங்கள் ஆபீஸ் பங்ஷனுக்கு வருவார்கள் என கூறுகிறார்.

ஹாஸ்பிடலில் இருந்து கீழே இறங்கிய பாக்கியா கோபியின் கார் வெளியே நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் தன்னிடம் பொய் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார். செல்வியும் சார் உன்கிட்ட நிறைய மறைக்கிறார். அவரு பெங்களூருக்கே போகல இங்க தான் இருந்திருக்காரு என கூறுகிறார். மேல போய் அவர் பிரண்டு யார் என்று பார்க்கலாம் வா என சொல்ல வேண்டாம் அவர் திட்டுவாரு என வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

வீட்டில் பாக்கியா ஒரு மாதிரி இருப்பதை பார்த்து எழில் என்னாச்சு என கேட்கிறார். எங்கப்பா என்கிட்ட எதுவும் பொய் சொல்வாரா? ஏதாச்சு மறைக்கிறாரா என கேட்கிறார். ஆமா என்னாச்சு என கேட்க அவர் ஒன்னும் இல்ல தோணுச்சு அதான் கேட்டேன் எனச் சொல்லி சமாளித்து கொள்கிறார்.

மறுநாள் காலையில் அனைவரும் பங்ஷனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். உறவினர்கள் அனைவரும் இடத்திற்கு வந்து விடுகின்றனர். இதுவரைக்கும் கோபிக்கு இங்கு வருவது ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் தான் என்பது தெரியாது. பிறகு அனைவரும் புதிய தொழில் தொடங்க உள்ள இடத்திற்கு சென்று விடுகின்றனர்.

அங்கே இனியா அப்பாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி போட்டோ எடுத்துக் கொள்கிறார். அப்போது போட்டோவில் பேனர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி இவர்களா சிறப்பு விருந்தினர் என கேட்கிறார். ஆமாம் என சொன்னதும் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் பங்க்ஷன், இவங்க எந்த பங்ஷனில் கலந்து போங்க என தெரியாமல் குழம்புகிறார். தன்னுடைய நண்பருக்கு போன் செய்து இது குறித்து கேட்க மேனேஜர் கண்டிப்பாக ராதிகா ஆபீஸ் பங்ஷனில் கலந்து கொள்வார்கள் என கூறிவிடுகிறார். இதனால் கோபி மகிழ்ச்சி அடைகிறார். அதேசமயம் பாக்கியாவையும் எழிலையும் இங்க வரமாட்டாங்க உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என சொல்கிறார்.

கடைசியில் எழில் ரஞ்சித் சாருக்கு போன் செய்ய அவருடைய மேனேஜர் விடுத்து அவர்கள் பெருங்குடி அருகே உள்ள ஒரு ஐடி கம்பெனி பங்ஷனுக்கு செல்கிறார்கள் என கூறி போனை வைத்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எழில் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் இன்னும் சிறப்பு விருந்தினர்கள் பரவில்லை வருவார்களா மாட்டார்களா என கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் எழில் அவன் இந்த பங்ஷனுக்கு வருவதாக தான் இருந்தது. ஆனால் கடைசியில் ஒரு சின்ன பிரச்சனை என சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் காரில் வந்து இறங்குகின்றனர். அதாவது காரில் சென்று கொண்டிருக்கும் போது இதே குரோம்பேட்டை க்குச் செல்லும் வழி இல்லையே என கேட்க மேனேஜர் பெருங்குடியில் நடக்கும் பங்ஷனுக்கு தான் போகிறோம் என சொல்ல யாரைக்கேட்டு கமிண்ட் பண்ணீங்க என திட்டுகிறார். எழில் விட்டு பங்ஷனுக்கு போகணும் உடனே வண்டியை திருப்பங்கள் என அவர்கள் இங்கே வந்து விடுகின்றனர்.

கடைசியாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சிறப்பு விருந்தினர்கள் அவர்கள் எழில் பற்றிப் பேசுகின்றனர். பிறகு பாக்யா தன்னுடைய பயணம் குறித்து பேசுகிறார். பிறகு உணவு சாப்பிட்டுவிட்டு மிகவும் சுவையாக இருப்பதாக சிறப்பு விருந்தினர்கள் கூறுகின்றனர்.

இந்த பக்கம் ராதிகாவின் ஆபீஸில் இருந்து அவருக்கு போன் மேல போன் அடித்து கேட்டுக்கொண்டே இருக்க அவர் கோபியை கேட்கிறார். கோபி தன்னுடைய நண்பருக்கு போன் செய்ய அவர்கள் வரமாட்டார்கள் வேற பங்ஷனுக்கு சென்று விட்டார்கள் என கூறுகிறார். மேனேஜர் தான் தப்பு பண்ணிட்டு இருக்காரு என சொல்கிறார். இதனை கோபி ராதிகாவிடம் சொல்ல அவர் டென்ஷனாகி போனை வைத்து விடுகிறார்.

இதனால் கோபி எழில் மீது கோபமடைகிறார். எழில் எல்லாம் உன்னால தான் என மனதுக்குள் திட்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சிறப்பு எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.