கோபிக்கு ஆப்பு மேல் ஆப்பாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அமைந்துள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 28.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியை ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் கோவிலில் பார்த்த அவருடைய அப்பா வீட்டிற்கு வந்த கோபியிடம் தனியாக பேச போய் ஏன் லேட் எதற்கு லேட் என கேட்டார். அதன் பின்னர் கோபி ஆபீஸில் வேலை இது எனக்கூற அவருடைய அப்பா கோபப்பட்டு நீ சொல்றதை எல்லாம் நேத்து வரைக்கும் நம்பினேன் இனி நம்ப மாட்டேன். இன்னைக்கு சாயந்திரம் 5.30 மணிக்கு நானும் அம்மன் கோவிலுக்கு வந்து இருந்தேன். ஒரு பொம்பளை கூட அவ்வளவு அன்யோன்யமாக பேசிட்டு இருக்க யார் அது என கேட்டார். அம்மன் கோவிலா நீங்க வேற யாரையோ பார்த்துட்டு பேசுறீங்க என கோபி சொல்ல நீ சொல்ற எல்லாத்தையும் நம்ப நான் ஒன்னும் பாக்கியா கிடையாது என சத்தம் போட்டார். அதன் பிறகு ஓ அந்த லேடி கேட்கறீங்களா? நான் மறந்தே போயிட்டேன் பா. அவங்க என்னோட ஃபிரண்ட் என்னோட ஆபீஸ்ல வேல பாக்குறாங்க. புதுசா கார் வாங்கியிருந்தாங்க பூஜை போட கோவிலுக்கு கூப்பிட்டாங்க அது தான் போயிருந்தேன் எனக் கூறினார்.

ராதிகா எப்பப்பா உன் ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்தா என கேட்க அதிர்ச்சியான உங்களுக்கு ராதிகாவை தெரியுமா? என் ஆபீஸ்ல தான் கன்சல்டன்ஸியா வேலை பார்க்குறாங்க என கூறினார். புள்ளைங்க எல்லாம் பெருசா வளர்ந்து விட்டாங்க. உன்னையே நம்பிட்டு இருக்க பாக்யாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ இருக்கவே மாட்டார். உன்னை யோக்கியனு நம்பி இருக்க உங்க அம்மாவுக்கு இது தெரிஞ்சா அடுத்த நிமிஷமே உன்னை தலை மூழ்கி விடுவார். அங்கு பார்த்ததை வீட்டில் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. நான் சொல்லலனா நான் இருக்கிற கொஞ்சநஞ்ச அமைதியும் கெட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் சொல்லல‌. இன்னையோட இது எல்லாத்தையும் விட்டுடு. இந்த வீட்டை மட்டும் கவனிக்கிற வேலைய பாரு. பாக்யாவுக்கு துரோகம் பண்ண நினைச்ச வெட்டி போட்டு விடுவேன் என சொல்லி விட்டு கீழே இறங்கினார்.

கோபி உண்மை தெரிந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். ரூமில் கணவரை காணவில்லை என ஈஸ்வரி வெளியில் தேடி வருகிறார். சோபாவில் படுத்துக் கொண்டிருக்கும் எழிலிடம் தாத்தா எங்கே எனக் கேட்கிறார். ‌ இருவரும் சேர்ந்து தேட அந்த நேரத்தில் இவர் மேலே இருந்து கீழே இறங்குகிறார். எங்க போனீங்க என கேட்டதற்கு மேலே போயிட்டு வரேன் என கூறினார். பிறகு ஈஸ்வரி உள்ளே சென்றதும் எழில் என்ன தாத்தா ஏதாச்சும் பிரச்சனையா என கேட்டார்‌. அதெல்லாம் ஒன்னும் இல்ல போன் நோண்டாம போய் தூங்கு என கூறினார்.

கோபியின் அப்பா ரூமுக்குள் சென்றதும் ஈஸ்வரி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க உடம்பு ஏதாச்சும் சரி இல்லையா என கேட்டார். இது கள்ளு உடம்பு டி படுத்து தூங்கு என கூறிவிட்டு படுத்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் எழில், ஈஸ்வரி பாட்டி மற்றும் தாத்தா ஆகியோர் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தனர். கோபியின் அப்பா ஏதோ யோசனையில் இருக்க இருவரும் அதை கவனிக்க என்ன ஏது என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறினார். இந்த நேரத்தில் கோபி மேலே இருந்து வர அப்பாவை பார்த்ததும் பயப்படுகிறார். கோபியை பார்த்ததும் அவருடைய அப்பாவின் முகம் ரணகளம் ஆகிறது. இதையெல்லாம் கண்காணித்த எழில் ஏதோ சம்பவம் நடந்திருக்கு என புரிந்து கொள்கிறார். பிறகு தன்னுடைய பாட்டியிடம் பாட்டி உங்க புள்ளைய பாருங்க என சொல்ல அவரும் கோபியை பார்த்து ஏன் கோபி ஒரு மாதிரி இருக்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என கூறுகிறார்.

இந்த சமயத்தில் பாக்கியா ராதிகாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்து விடுகிறேன் என கூறுகிறார். கோபியின் முகம் அதிர்ச்சி அடைகிறது. பிறகு அவருடைய அப்பா இருமா நான் கொடுத்துட்டு வர்றேன் என சொல்கிறார். ‌ இல்ல மாமா நான் போயிட்டு வரேன் என பாக்கியா சொல்ல ஈஸ்வரியும் டெய்லி அவ தானே கொடுப்பா போய்ட்டு வருவா என கூறுகிறார். காலையில் வாக்கிங் போகல. இதைப்போய் கொடுத்துட்டு வந்தா வாக்கிங் போன மாதிரியும் இருக்கும் கொடுத்த மாதிரியும் இருக்கும் என கூறி விட்டு போய் சட்டையைப் போட்டுக் கொண்டு ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார்.

உடனே கோபி மேலே சென்று ரூமில் ராதிகா பாவம் என அவருக்கு போன் போடுகிறார். ஆனால் ராதிகா போன் எடுக்கவில்லை. போன் எடுத்தாலும் எங்க அப்பா வராங்க அவர் சொல்ற எதையும் நம்பாதனு சொல்லலாமா? எங்க அப்பா வருகிறார்னு சொன்னாலே எல்லா உண்மையும் தெரிஞ்சு போய்விடுமே என புலம்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.