Baakiyalakshmi Serial Episode Update 28.09.21

பாக்யாவுக்கு உன்னால் செய்ய முடியாது என சவால் விட்டுள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Episode Update 28.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆயிரம் பேருக்கு சமைக்கும் ஆர்டரை எடுத்துள்ள பாக்யா அக்கம்பக்கத்தார் சேர்த்தே ஆர்டரை முடித்துக் கொடுக்க திட்டம் போடுகிறார். இதற்காக அக்கம் பக்கத்தாரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து திட்டத்தைக் கூறினார். முதலில் சிலர் என்னால் முடியாது என கிளம்பிச் சென்ற நிலையில் கிட்டத்தட்ட 10 பேர் தாங்கள் செய்வதாக பாக்கியாவுடன் கைகோர்த்துள்ளனர்.

நலம், வளம் எல்லாமே துளசிதான்ங்க. எப்டின்னா.!

இதனையடுத்து பாக்யா கோபிக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு சென்றபோது இவரை நாங்க சொல்றது எதையும் கேட்க மாட்டாயா என திட்டினார். பாக்கியா எனக்கு நம்பிக்கை இருக்கு நான் செய்து முடிப்பேன் என நினைக்கிறேன் என கூற உன்னால சத்தியமா முடியாது. நீ பெருசா மாட்டிட்டு தவிக்க போற என கண்டபடி திட்டி தீர்க்கிறார். உனக்கு திமிரு அதிகமாயிடுச்சு தலைக்கனம் ஜாஸ்தி ஆகிடுச்சு. வீட்ல சும்மா உட்கார முடியல என வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார். என் முன்னாடியே நிக்காதே உன்ன பார்த்தா எரிச்சலும் கோபமும் தான் வருது என திட்டி வெளியே அனுப்பிவிடுகிறார்.

பாக்கியா வீட்டிலிருந்து ஆபீஸ் சென்ற அமிர்தா எழிலை பார்த்து அவருடைய அம்மாவை பாராட்டினார். அவங்க செய்யறது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு அவர்களுக்கு ஆதரவாய் இருக்கணும்னு நினைக்கிறேன் என கூறுகிறார். இவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசுவதை கவனித்த எழிலின் நண்பர் நீ அவங்களை காதலிக்கிறியா என கேட்கிறார். எனக்கு என்னமோ அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க கல்யாணம் ஆகி கணவனை இழந்தவர் என்பதையெல்லாம் நாம் யோசிக்கலாம். ஆனா அதே சமயம் நான் விரும்புகிறவர்கள் அவங்க வீட்ல தெரிஞ்சா என்ன நினைப்பாங்கன்னு தெரியல என கூறுகிறார்.

India-ல இதுதான் First Time பிரம்மாண்டமா இருக்கும்.! | Khazana Jewellery FAT-21 Season 3 | Chennai HD

அதன் பின்னர் பாக்கியா, ஜெனி, எழில் மற்றும் பாக்கியாவின் மாமனார் ஆகியோர் இந்த ஆர்டரை எப்படி செய்து முடிக்கலாம் என திட்டம் போடுகின்றனர். பொருட்களை வாங்கித்தர பணமில்லை என யோசிக்கிறார் பாக்கியா. இதனால் அவருடைய மாமனார் நான் தருவேன் என கூறுகிறார். ஜெனியும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தருகிறேன் எனக் கூறுகிறார். ஆனால் அதெல்லாம் வேண்டாம் எனக் கூற எழில் கடையிலேயே பொருள் வாங்கிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சு பணம் தரேன்னு சொல்லி கேட்டு பார்க்கலாம் என கூறுகிறார். ஜெனி மற்றும் பாக்யாவின் மாமனாரும் இது நல்ல ஐடியாவா இருக்கு அப்படியே கேட்டு பார்க்கலாம் என கூறுகின்றனர்.

பின்னர் ரூமில் ஜெனி தனக்கு வாந்தி அதிகம் தருவதாகும் வாய் கசப்பாக இருப்பதால் வீட்டிலேயும் வேலைசெய்ய முடியல ஆபீஸ்ல வேலை செய்ய முடியல எனச் சொல்லியும் விடைபெறுகிறார். இதனையடுத்து செழியன் இதை தான் முதல்ல இருந்து சொல்லிட்டு இருக்கேன் என கூறுகிறார். அவசரப்பட்டு செழியனிடம் சொல்லிட்டேனே என யோசிக்கிறார் ஜெனி.

அதன்பிறகு செழியன் தனக்கு அப்ராட் செல்லும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். இதனால் அப்போ நான் வீட்ல தனியா இருக்கணும் என ஜெனி கூற நீயும் என்னோட வந்து விடு என செழியன் கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.