அப்பாவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார் கோபி.
Baakiyalakshmi Serial Episode Update 26.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். இந்த பக்கம் பாக்கியா அவருடைய மாமனாரும் கோவிலுக்கு ஆட்டோவில் செல்கின்றனர். முதலில் ராதிகா கோபி ஆகியோர் கோவிலுக்குள் நுழைய பின்னாடியே பாக்கியாவும் அவருடைய மாமனாரும் செல்கின்றனர்.
இன்றைய ராசி பலன்.! (26.10.2021 : செவ்வாய்க் கிழமை)
இவர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்க கோவிலைச் சுற்றி வந்துவிடலாம் பாக்கியாவின் மாமனார் கூற இருவரும் கோவிலை சுற்றுகின்றனர். அதற்கு இவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு காருக்கு பூஜை போடுவதற்காக வெளியே செல்கின்றனர். இந்தப்பக்கம் சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில் அமர்கின்றனர் பாக்கியாவும் அவருடைய மாமனாரும். பாக்கியா மாமா ஜெனி வீட்டுக்கு போயிட்டு வரலாம் வர்றீங்களா என்று கேட்கிறார். அவருடைய மாமனார் இல்லம்மா நான் வரல. தப்பு முழுக்க நம்ப பக்கம் வச்சிக்கிட்டு எந்த முகத்தை வெச்சிகிட்டு அங்க போகிறது. நீ வேணும்னா போய்ட்டு வா நான் கோவிலிலேயே காத்திருக்கிறேன் என சொல்கிறார். சரியென பாக்கியா அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறி விட்டு ஜெனியின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு போய் ஜெனிக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர்களுடைய அப்பா அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார்.
இதற்கிடையில் இங்கு கோபியை பார்த்துவிடுகிறார் அவருடைய அப்பா. அதன்பிறகு கோபி ராதிகா மற்றும் அவருடைய மகள் மய்யூவிற்கு குங்குமம் வைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னாடியே இவர்களைப் பின்தொடர்ந்து செல்ல அதற்குள் அனைவரும் காரில் ஏறிச் சென்று விடுகின்றனர்.
Superstar Rajinikanth-ன் உண்மையை உடைத்த Soundarya Rajinikanth.!
கோபிக்கும் ராதிகாவுக்கும் நீண்ட நாளாக தொடர்பு இருப்பதை உணர்கிறார் அவருடைய அப்பா. பாக்யாவின் கணவன் என்று தெரிந்தும் எப்படி ராதிகா பாக்கியாவுக்கு துரோகம் செய்கிறார் என புலம்புகிறார். இதனால்தான் அன்னைக்கு இனியாவை கூட்டிட்டு போயி ராதிகா வீட்ல விடுவதற்கு அவ்வளவு தயங்கி இருக்கான் என்று நினைக்கிறார். அதன் பின்னர் பாக்கியா கோவிலுக்குள் நுழைய அத்துடன் முடிகிறது பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்.