அப்பாவிடம் வசமாக சிக்க உள்ளார் கோபி.
Baakiyalakshmi Serial Episode Update 25.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவிடம் கோபி பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் ராதிகா போன் செய்து நாளைக்கு காரை டெலிவரி எடுக்க செல்ல வேண்டும் என கூறுகிறார். இதனையடுத்து பாக்கியாவிடம் ஜெனி வீட்டிற்கு நாளை மறுநாள் போகலாம் என கூறுகிறார்.
மறுநாள் ராதிகாவுடன் காரை டெலிவரி எடுக்க செல்கிறார் கோபி. அங்கே சேல்ஸ்மேன் மய்யூவிடம் உங்க அப்பா எங்கமா என கேட்கிறார். கோபியை அவர் அப்பா என சொன்னதும் ஷாக் ஆகிறார் மய்யூ. அதேபோல் குரூப்பாக ஃபேமிலி போட்டோ எடுத்துக்கோங்க என சொன்னதும் மூவரும் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட போதும் அதிர்ச்சி அடைகிறார் மய்யூ.
போட்டியில் இருந்து விலகுகிறேன் : ‘டென்னிஸ் சூறாவளி’ ஆஷ்லி பார்ட்டி அறிவிப்பு
வீட்டிற்கு வந்ததும் ராதிகாவிடம் அங்கு நடந்ததை சொல்கிறார். ராதிகா அவர்களுக்கு என்ன தெரியும் தெரியாமல் சொல்லியிருப்பாங்க என கூறுகிறார். ஃபேமிலி போட்டோ என்று சொன்னதும் அவரும் வந்து நின்னாரு அப்ப அவரும் நம்ம பேமிலியா எனக் கேட்கிறார். பிரெண்ட் கூட ஃபேமிலி மாதிரி தான் என சொல்கிறார் ராதிகா. பின்னர் ராதிகா மய்யூ தன்னிடம் கேட்டதை கோபியிடம் சொல்கிறார். இதுக்கு முன்னாடி எல்லாம் இந்த மாதிரி ஏதாவது நடந்தா மய்யு ரொம்ப கோபப்படுவா, ஆனா இப்போ பெருசா எதுவும் எடுத்துக்கல எனச் சொல்கிறார். கோபி மய்யூ எனக்கு பொண்ணு மாதிரிதான். அவளுக்கு நான் என்னைக்கும் பாதுகாப்பாக இருப்பேன். யாராவது உங்க அப்பா வந்து கேட்டா நான் ஆமான்னு சொன்னா எனக்கு சந்தோஷம் என சொல்ல ராதிகா ஷாக் ஆகிறார். உடனே சொல்லல என்றாலும் பரவாயில்லை என கூறி சமாளித்து கொள்கிறார். பிறகு ஈவினிங் காருக்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு போகலாம் என சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.
இந்த பக்கம் பாக்கியா மகன் செழியனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மேலே செல்கிறார். ஆனால் செழியன் ஜெனி நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். நீ என்னோட அவங்க வீட்டுக்கு வந்திருந்தா ஜெனி இங்க வந்து இருப்பா என சொல்கிறார். பாக்கியா ஜெனிக்கு ஆதரவாக பேசியதாக செழியன் கோபம் அடைந்து அவரை வெளியே போகச் சொல்கிறார்.
Sivakarthikeyan-னின் Doctor படம் லாபம்..ஆனால்? – Nelson-னை திட்டிய Producer K.Rajan
அதன் பின்னர் பாக்யாவின் மாமனார் கோவிலுக்கு ஈஸ்வரியை அழைக்க அவர் நான் வரவில்லை என சொல்கிறார். பிறகு பாக்கியா நான் வருகிறேன் என சொல்லி விட்டு கோவிலுக்கு கிளம்புகிறார். அதேபோல் அந்தப்பக்கம் கோபி ராதிகா மற்றும் மய்யூ கோவிலுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.
நாளைய எபிசோடில் கோபி ராதிகாவிற்கு குங்குமம் வைத்து விடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் அவருடைய அப்பா. உடனே கோபியை பார்க்கச் செல்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.