கோபிக்கு ராதிகா மாதிரி படிச்ச பொண்ணை கட்டி வச்சு இருக்கணும் என பாக்கியாவை குற்றம் சொல்கிறார் ஈஸ்வரி.
Baakiyalakshmi Serial Episode Update 21.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவுக்கு பெரிய ஆர்டர் கிடைத்தது கிண்டலடித்து குடும்பத்தார் அனைவரும் பேசுகின்றனர். இதனால் பாக்கியா மன வருத்தத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு டீ கொடுத்து ஆறுதல் கூறுகிறார் எழில். நீ எதையும் இந்த வீட்டில சொல்லாதமா.. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய் என கூறுகிறார்.
இன்னொருபுறம் விழுந்ததுமே ராதிகா வீட்டிற்கு செல்கிறார் கோபி. உங்களை பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன் என கூறுகிறார். அப்போது மய்யூ நாளைக்கு நாங்க கார் வாங்கப் போகிறோம் என கூறுகிறார். ராதிகா பணத்திற்காக பேங்க் லோன் வாங்கப் போவதாக கூறுகிறார். நான்தான் பணம் கொடுப்பேன் நாளைக்கு நம்ம மூணு பேரும் போறோம் காரை புக் செய்கிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கோபி.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்
இங்கே பாக்கியா செல்வி இருவரும் சேர்ந்து வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மய்யூ சாப்பாடு சூப்பராக இருந்ததாக மெசேஜ் செய்ததாக பாக்கியா கூறுகிறார். அதன் பின்னர் ராதிகா கார் வாங்கப் போவது குறித்தும் பாக்கியா பேசுகிறார்.
அதற்கு ஈஸ்வரி பாட்டு கோபிக்கும் இந்த மாதிரி படிச்ச பொண்ணா கட்டி வைத்திருந்த இன்னும் 2 கார் வீடு என வாங்கி இருக்கலாம். உன்னால 10 பைசாவுக்கு ப்ரயோஜனம் இருக்கா என பாக்கியாவை கிண்டல் செய்கிறார். அவர் கொடுக்கிற காசு வீட்டுக்கு பத்திரத்தை இல்ல மேற்கொண்ட ஆகிற செலவு நான் தான் பார்த்துக் கொள்வேன் என கூறுகிறார் பாக்கியா. என ஆயிரம் ரெண்டாயிரம் செலவு பண்ணுவியா அது ஒரு பெரிய விஷயமா என கூறுகிறார் ஈஸ்வரி பாட்டி.
மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela
மாமியார் இவ்வாறு பேசுவதை எண்ணி வருத்தப்படுகிறார் பாக்கியா. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.