ஒருவழியாக பிரச்சினையை தீர்த்து ஜெனியை தன் வீட்டுக்குக் அழைத்து வந்துள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Serial Episode Update 20.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஈஸ்வரி சொல்வதைக் கேட்காமல் பாக்கியாவும் கோபியும் ஜெனி வீட்டிற்குச் சென்று அவருடைய பெற்றோர்களிடம் பேசினர். ‌‌முதலில் இவ்வளவு பேசியும் ஜெனியை அனுப்ப அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு பாக்கியா ஜெனியிடம் பேசினார். செய்யன் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறான் நீயும் அவனை மிஸ் பண்றேன்னு எனக்கு தெரியும் என அழகாக பேசி அவர்களின் பெற்றோர்கள் மனசுக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்க சம்மதம் வாங்கினார்.

பிறகு பாக்கியா , கோபி ஆகியோர் ஜெனியை கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இந்தப் பக்கம் ஜெனியின் வருகைக்காக செழியன் காத்துக்கொண்டிருக்கிறார். ஈஸ்வரி அதெல்லாம் ஜெனி வரமாட்டார் போய் வேலையை பாரு என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் கோபி மற்றும் பாக்கியா உள்ளே வர நான் சொன்னேனே கேட்டீங்களா போய் அசிங்கப்பட்டு வந்தீர்களா என கேட்கிறார். இந்த நேரத்தில் ஜெனி என்ட்ரி கொடுக்க செழியன் உற்சாகம் அடைகிறான். ‌‌‌‌‌

வெற்றியை விரட்டிப் பிடித்த ‘கெத்து’ : நம்ம சிந்துவை முந்த முடியுமா..?

பிறகு ஜெனி ஈஸ்வரி பாட்டியிடம் முயற்சிக்க அவர் எழுந்து உள்ளே சென்று விடுகிறார். பின்னர் கோபி அம்மாவை பத்திதான் உனக்கு தெரியுமே விடு அவங்களே பேசுவாங்க என கூறுகிறார். பிறகு ஜெனி ரூமிற்கு சென்று விடுகிறார்.

அதன்பிறகு செழியன் அவருடைய அப்பாவுக்கு நன்றி சொல்ல கோபி மொத்த நன்றியையும் உங்க அம்மா பாக்யாவுக்கு சொல்லு. அவ தான் ரொம்ப அழகா பேசி அவங்களை கன்வின்ஸ் பண்ணி ஜெனியை கூட்டிட்டு வந்தா. எனக்கு கூட இப்படி பேச வராது. அவ்ளோ அழகா பேசினார் என பாக்கியாவை கோபி பாராட்டுகிறார். பாக்கியா வந்த பிறகு அவரிடம் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் செழியன் எழுந்து சென்று விடுகிறார். இவை என்ன உனக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் போகிறான் என கோபி கேட்க அவன் தேங்க்ஸ் சொல்லுவானா இதெல்லாம் செய்தோம் என கூறுகிறார்.

பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து ஜெனி உடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரிடமும் பேசும் ஜெனி செழியன் இடம் மட்டும் பேசாமல் இருக்கிறார். எல்லார்கிட்டயும் பேசுறா என்கிட்ட மட்டும் பேச மாட்ற என செழியன் மனசுக்குள்ளேயே புலம்புகிறார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar 

பிறகு எழில் வந்து ஜெனியை நலம் விசாரிக்கிறார். நீங்க பண்ணது தான் சரி இவன் கூட எல்லாம் மனுஷன் வாழ்வானா என கூறுகிறான். பிறகு செல்வி செய்யும் தம்பி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க என சொல்லிவிட்டு ஜெனியிடம் இந்த வீட்ல நானே பதினாலு வருஷமா வேலை பார்க்கிறேன். செழியன் தம்பி யார் கிட்டயும் பேசாது சரியான சிடுமூஞ்சி என கூறுகிறார். இந்த தம்பிய நீ எப்படி லவ் பண்ண என கேட்கிறார். என் கிட்ட எல்லாம் செழியன் அப்படி இருந்தது இல்ல நல்லா தான் பார்த்துப்பான் என ஜெனி சொல்ல அப்போ இப்போ பார்த்துகலயா என செழியன் கேட்கிறார். இல்லை என ஜெனி சொல்ல பிறகு செழியன் ஜெனி பக்கத்தில் உட்கார்ந்து சத்தியமா உன்னை நான் எவ்வளவு மிஸ் பண்ணினேனு தெரியுமா எனக் கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

இதனை தொடர்ந்து வெளியான புரோமோவில் கோபியின் அப்பா வீட்டுக்கு வந்துள்ள நிலையில் தன்னுடைய சொத்துக்களை பிரித்து உயில் எழுதி வைத்துள்ளதாக ஈஸ்வரியிடம் கூறுகிறார். எதுக்கு உயிறே தினம் நமக்கு பின்னாடி எல்லாமே கோபிக்கு தானே என சொல்ல கோபிக்கு எதுவும் கிடையாது. என் சொத்து எல்லாத்தையும் பாக்கியாவுக்கும் என் பேரப் பிள்ளைகளுக்கும் பிரித்து எழுதி இருக்கேன் எனக் கூறுகிறார்.

YouTube video

பிற செய்திகள்:

1.அபிஷேக் ராஜாவைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அடுத்த பிரபலம்.. யார் இவர் தெரியுமா??

2.வீட்டுக்குத் தெரியாமல் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயம் ஆயிடுச்சா?? அதிர்ச்சியான நாகர்ஜூனா

3.வலிமைக்கு வழிவிட்ட சன் பிக்சர்ஸ்.. வசூலில் தெறிக்க விடப் போகும் தல அஜித் – செம மாஸ் தகவல்.!!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.