செழியன் மீது கடும் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜெனி.
Baakiyalakshmi Serial Episode Update 18.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனியின் பெற்றோர் வீட்டுக்கு வந்து இந்த நிலையில் அவர்களுடன் வீட்டிற்கு சென்று வருவதாக ஜெனி கூறினார். வீட்டில் உள்ள அனைவரும் சரி என்று கூறிய நிலையில் செழியன் வேண்டாம் என ஜெனியிடம் கெஞ்சினார். அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு பாக்கியா மேலே சென்று ஊருக்கு கிளம்புவதற்கு உதவி செய்தார். செழியன் நான் வேண்டாம் என சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ என்னம்மா போயிட்டு வர சொல்ற வேண்டாம்னு சொல்லுமா என கூறுகிறார். ஆனால் அதை காதில் வாங்காமல் பாக்கியா ஜெனிக்கு உதவி செய்தார்.
பிறகு ஜெனி கீழே வந்து அனைவரிடமும் போய் வருவதாக கூறினாள் ஆனால் செழியனிடம் மட்டும் எதையும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். ஜெனி அவர்களது வீட்டிற்கு கிளம்பியதும் இரவில் அனைவரும் அமர்ந்து கொண்டிருந்த போது இனியா படிக்கவே புரியல கஷ்டமாக இருக்கிறது எனக் கூறினார். அதேபோல் செழியன் வேலை செய்ய முடியவில்லை என கூறினார். இதனையடுத்து கோபி இருவருக்கும் ஆறுதல் சொல்லி ஒரு கதையைக் கூறினார். பிறகு இருவரும் ஒரு அளவிற்கு மனதளவில் தேறினர். மூவரும் சேர்ந்து வாக்கிங் சென்றனர்.
மறுநாள் காலை பாக்கியாவும் இனியாவும் சேர்ந்து ராதிகா வீட்டிற்கு சென்றனர். ராதிகா பாக்கியா டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஏது என கேட்க நடந்ததை கூறினார். பிறகு நாங்கள் ஒரு நாள் பிக்னிக் செல்கிறோம் நீங்களும் வாங்க என அழைத்தார். இனியா நான் வருகிறேன் என சொன்னார். பாக்யா வீட்டில் கேட்டுவிட்டு சொல்வதாக அவரை கூட்டி வந்தார். நான் கண்டிப்பாக போவேன் என இனியா பாக்யாவிடம் சண்டையிட்டார். அதன் பிறகு நான் அப்பாவிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறிவிட்டு கோபியிடம் கேட்டதற்கு அவர் போயிட்டு வா என கூறினார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.
அதன்பிறகு தொடர்ச்சியாக ஒளிபரப்பான ப்ரோமோ வீடியோவில் வேற யாரும் இல்லைங்க ராதிகா கூடத்தான் என கூற அதிர்ச்சி அடைகிறார் கோபி. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.