அமிர்தா கொடுத்த அதிர்ச்சியால் எழில் ஆடி போயுள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 15.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி காரில் நண்பருடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு போதும் ராதிகாவை என்னால் விட முடியாது. பாக்யாவா ராதிகாவா என வந்தால் நான் ராதிகா பக்கம் தான் சாய்வேன். ராதிகா இல்லாம என்னால இருக்க முடியாது ‌ என கூறுகிறார்.

இந்தப் பக்கம் வீட்டில் பாக்கியா மற்றும் இனியா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போது எழில் உள்ளே வருகிறார். இனியா மற்றும் பாக்யாவுக்கு தான் வாங்கிய வாட்சை கொடுக்கிறார். பிறகு எழிலிடம் பாக்கியா அமிர்தா பிறந்தநாளுக்கு என்ன வாங்கி இருக்க என கேட்க வாட்ச் வாங்கி இருப்பதாக கூறுகிறார்.

இந்த பக்கம் ராதிகா வீட்டில் இருக்கும் நேரத்தில் கோபி அவருடைய வீட்டிற்குச் செல்ல ராதிகாவின் அம்மாவின் முகம் மாறுகிறது. இந்த கண்றாவி எல்லாம் பார்க்காமல் இருக்கத்தான் நான் ஊருக்குப் போறேன்னு சொல்கிறேன் என அவர் சொல்ல ராதிகா அமைதியாக இருக்குமாறு கூறுகிறார். பிறகு கோபி நான் வராது உங்களுக்கு பிடிக்கலனு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா என்னால ராதிகாவுக்கும் மய்யூவுக்கும் எப்போதும் எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார்.

இந்தப் பக்கம் எழில், அமிர்தா வீட்டிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்க அவருடைய நண்பர் அமிர்தா உனக்கு முன்பாக உன்னிடம் காதலை சொல்லப் போகிறார் என கூறுகிறார். அப்படி நடந்தா நன்றாக இருக்கும் என்று எழில் யோசிக்கிறார்.

அப்படியே இந்தப் பக்கம் செல்வி பாக்கியம் இடம் என்னுடைய புருஷன் நான் வாங்கி கொடுத்த பைக்கில் வேறு ஒரு பெண்ணை கூட்டி கிட்டு ஒரு சிற்றாறு பார்க்கவே கஷ்டமாயிருக்கு என கூறி அழுகிறாள். பாக்கியா அவர் பத்திதான் உனக்கு தெரியுமே அதை பத்தி நினைச்சு வருத்தப்படாத விடு என சொல்கிறார் பாக்யாவின் மாமியாரும் இதையே கூறுகிறார். செல்வி அந்த ஆளு கண் டவுன்லோடு சுத்திட்டு திரும்பவும் வீட்டுக்குள்ள வர்றபோ எனக்கு கஷ்டமா இருக்கு என சொல்கிறார். தொடப்ப கட்டயால அடி என கூறுகிறார்.

அதன்பிறகு செல்வி பாக்கியாவிடம் கோபி சார் இப்படி ஏதாச்சும் பண்ணா நீ என்ன பண்ணுவ என கேட்கிறார். அவர் அப்படி பண்ணவே மாட்டார் என பாக்கியாவும் அவருடைய மாமியாரும் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி மட்டும் நடந்ததை நான் பார்த்தா என் இதயமே நின்று போய்விடும் என பாக்யா கூறுகிறார். அவருடைய மாமியார் அதெல்லாம் எதுக்கு நினைத்து பார்க்கிற அதெல்லாம் இந்த வீட்டில் நடக்க வாய்ப்பே இல்லை என கூறுகிறார்.

இந்தப் பக்கம் எழில் அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தாவின் அப்பா அம்மா வீட்டிற்கு அவரை அழைக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட். இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அமிர்தா கையில் குழந்தையுடன் வந்து இது என்னுடைய குழந்தை என கூறுகிறார். இதனால் எழில் அதிர்ச்சி அடைகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.