பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற சொல்கிறார் ராதிகா.
Baakiyalakshmi Serial Episode Update 12.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவின் பிரச்சினைக்குப் பிறகு ராதிகா வீட்டுக்குச் செல்லும் கோபி கதையை உல்டாவாக கூறுகிறார். என்னுடைய அக்கவுண்டில் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து விட்டேன். பிரச்சினை முடிந்தது என பார்த்தால் மறுநாள் காலையில் மீண்டும் ஒரு கூட்டம் வீட்டின் வாசலில் நிற்கிறது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 25 வருஷமா பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். என்னுடைய மூணு குழந்தைகளுக்காகத் தான் நான் எங்கே போகிறேன். நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கனும் ராதிகா என கூற ராதிகாவும் அப்படி நடந்திருந்தா என்னுடைய வாழ்க்கையிலும் ராஜேஷ் சாப்டர் வந்திருக்காது என கூறுகிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்கு அந்த லைஃப்ல இருக்கீங்க. அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளிய வாங்க என ராதிகா கூறுகிறார். நீ சொல்றது சரிதான் ராதிகா என கோபி கூறுகிறார்.
நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்
இந்தப் பக்கம் எழில் பணத்தை எப்படி மீட்டேன் என்பது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். அதன்பிறகு பாக்கியாவிடம் அமிர்தாவிடம் பணத்தை கொடுக்குமாறு எழிலிடம் கொடுக்கிறார்.
சிட்டி ரோபோ மாதிரி நடிச்சு இருக்காரு – Doctor Day 3 Public Review | Sivakarthikeyan, Nelson
பிறகு எழில் அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தாவின் அம்மா என்னிடம் பேசாதே என கூறுகிறார். ரெண்டு நாளா பாக்க வரல ஒரு போன் கூட இல்லை என கூறுகிறார். அதன் பின்னர் அங்கு நடந்ததை கூறுகிறார். ஒரு வழியாக பணம் கிடைத்து விட்டது எனக் கூறி அமிர்தாவிடம் அவருக்கான பணத்தை கொடுக்கிறார். பின்னர் எனில் உங்களுக்கு இப்போ வயிறு வலி எப்படி இருக்கு என நலம் விசாரிக்கிறார். நீ சொன்ன மாதிரி பண்ணதும் சரியாகிடுச்சு என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.