குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்துள்ளார் எழில்.

Baakiyalakshmi Serial Episode Update 09.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஆந்திரா சென்றுள்ளார். பாக்கியா இங்கே விடிந்தால் அனைவரும் பணம் கேட்பார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். ஜெனி செழியனிடம் என்னிடம் நீ ஏதாவது அம்மாவுக்கு உதவி பண்ணலாமே என கூறுகிறார். இதனால் செழியன் ஜெனியை திட்டி விடுகிறார்.

துளசி போல வருமா?

மறுநாள் காலை விடிந்ததும் ஈஸ்வரி எல்லாரும் பணம் கேட்ட வருவாங்க இவ்வளவு நாளா சேர்த்து வைத்திருந்த மரியாதை, மானம் எல்லாம் போகப் போகுது என அழுகிறார். அம்மா எப்படி அழறாங்க பாரு என கோபி பாக்கியாவை திட்டுகிறார். பாக்யா பணம் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டின் முன்பு கூடி பணத்தை வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என கூறுகின்றனர். பாக்கியா எவ்வளவு சொல்லியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. கடுப்பான கோபி பாக்கியாவை அழைத்து இப்ப நீ என்ன செய்யப் போகிறாய். இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாரும் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கணும். கூடவே நீயும் சேர்ந்து போயிடு என திட்டுகிறார். எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ளைண்ட் கொடுத்து போலீஸ் கைது செய்தால் போய் கம்பி எண்ணு என கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியே போ என கோபி கூறுகிறார். இதனால் கோபியின் அப்பா இப்ப என்ன அவர்களுக்கு பணம் தான கொடுக்க வேண்டும் அதை நான் தருகிறேன் என கூறுகிறார். என்னுடைய பென்ஷன் பணத்திலிருந்து கொடுக்கிறேன் என பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார். இதனையடுத்து பாக்யாவின் மாமனார் அங்கிருப்பவர்களிடம் உங்களுக்கு பணம் நான் தருகிறேன். நான் பாக்கியாவும் பேங்கிற்கு தான் செல்கிறோம் இங்கேயே காத்திருங்க, இல்லை என்றால் போயிட்டு வாங்க என கூறிவிட்டு பேங்கிற்கு செல்கின்றனர்.

Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan | Vetri Theatre

இந்தப் பக்கம் எழில் ஆந்திரா போலீஸ் உதவியுடன் பணம் கொள்ளையடித்த கும்பலை பிடிக்கிறார். ஆனால் போலீசார் அவர்களிடம் இப்போது பணம் இல்லை என சொல்கிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு காவலாளிகளை அனுப்பியுள்ளேன். பணம் கிடைத்தால் ஓகே இல்லை என்றால் அதற்கு தாமதமாகும் என கூறுகிறார். இவர்களை கோர்ட்டிற்கு கொண்டு சென்று அதன் பின்னர் விசாரிக்க வேண்டும் என கூறுகிறார்.

வங்கிக்கு சென்ற பாக்கியாவும் அவருடைய மாமனாரும் செக் எழுதி அதிகாரியிடம் கொடுக்கின்றனர். மூன்று லட்சத்தை எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய சொந்த பிரான்ச் திருநெல்வேலிக்கு தான் செல்ல வேண்டும் என கூறி விடுகின்றனர். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.