கேள்வி கேட்ட அப்பாவால் அனைவர் முன்னிலையிலும் கோபத்தை வெளிக்காட்டி உள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Episode Update 06.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டிலிருந்து கோபி கிளம்பியது ராதிகாவின் அம்மா 9 மணிக்கு ஒரு ஆம்பள வீட்டுக்கு வந்து போவது சரியா இருக்கா? அக்கம்பக்கத்தார் என்ன சொல்லுவாங்க என கேட்கிறார். சும்மா எதையாவது சொல்லிக்கொண்டு என அவருடைய அம்மாவின் வாயை அடைக்கிறார் ராதிகா.

இந்தப் பக்கம் கோபிகா அனைவரும் காத்துக் கொண்டிருக்க இனியா ரொம்ப பசிக்குது என்ன சொல்கிறார். பிறகு கோபி வர இனியா ஏன் லேட்டு என கேட்கிறார். அப்பா கொஞ்சம் பிசி என சொல்கிறார் கோபி. பிறகு கோபியின் அப்பா ஏன் இவ்வளவு நேரம் என கேட்கிறார். எங்க போய்ட்டு வர ஆறு மணிக்கு ஆபீஸ் க்கு போன் பண்ணேன் நீ அங்க இல்லையே என சொல்கிறார்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

இதனால் கோபமான கோபி என்னப்பா என்ன கண்காணிக்கிறீங்களா? இத வீட்டுக்காக எப்படி உழைக்கிறேனு என் கூட வந்து பாருங்க. என் பிள்ளைகளை முன்னாடி நிக்க வச்சு என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. இத்தனை வருஷமா உங்க பேச்சை கேட்டு தான் நடந்து கொண்டிருந்தேன். இந்த வயசுலயும் நான் என்ன பண்ணனும்னு நான் தேர்ந்தெடுக்க கூடாதா? என்ன பேச வைக்காதீங்க என கூறிவிட்டு உள்ளே செல்கிறார். ஈஸ்வரி பாட்டி அவனே இப்பதான் ஆபீசில் இருந்து வந்தான். அவன்கிட்ட போய் கோபப்பட்டு இருக்கீங்க என கணவரை திட்டுகிறார்.

அதன் பின்னர் கோபி ரூமிற்குள் சென்று இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என புலம்புகிறார். இது பக்கம் எழில் அமிர்தாவுக்கு போன் செய்து பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். உங்களிடம் நானும் ஒன்றை சொல்லணும். அதுவும் சரப்ரைஸ் தான் என சொல்கிறார்.

மறுநாள் காலையில் கோபியின் அம்மா சோபாவில் அமர்ந்து கொண்டு இருக்க கோபியும் வந்து அமர்கிறார். பிறகு அவருடைய அப்பா வந்து அமர கோபி எழுந்து உள்ளே செல்ல முற்படுகிறார். அவரின் அம்மா என் பாவ உள்ளே போற என்று கேட்க ஆபீஸ்க்கு கிளம்பனும் என சொல்கிறார். இன்னும் நேரம் இருக்கு உக்காரு என சொல்கிறார். உனக்கு உங்க அப்பாவுக்கும் என்ன பிரச்சனை ஏன் ரெண்டு பேரும் எலியும் பூனையுமாக இருக்கீங்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறுகிறார் கோபி.

Free-ஆ Ticket கொடுத்த கூட படத்துக்கு வராதீங்க! – Annaatthe Day 2 Public Review

இந்த நேரத்தில் பாக்கியா ராதிகா வீட்டுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருவதாக வந்து கூறுகிறார். கோபியின் அப்பா நான் போறேன் ராதிகா கிட்ட அன்னைக்கு நிறைய பேசலாம் நெனச்சேன் பேச முடியல. இன்னைக்கு மொத்தமா பேசிட்டு வந்து விடுகிறேன் என கூறுகிறார்.

கோபி நீங்க எதுக்கு அங்க போகணும் அதெல்லாம் போகத் தேவையில்லை என கூறுகிறார். அதை நீ சொல்லாத என கோபியின் அப்பா சொல்கிறார். பாக்கியங்கள் பாக்கியா உன்ன அன்னைக்கே சொன்னேன்ல நீயும் அலையாத ஒரு ஆள் வெச்சுக்கோனு என கூறுகிறார்.

அப்பாவை அனுப்பாத என சொல்கிறார். அவ கிட்ட என்ன மிரட்டிகிட்டு இருக்க என கோபியின் அப்பா கூற அதை நீங்கள் சொல்லாதீங்க என பதில் கூறுகிறார். பின்னர் கோபி மேலே சென்று விட அதைப் பின் தொடர்ந்து அவருடைய அப்பாவும் ரூமிற்கு சென்று கதவை சாத்துகிறார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.