Baakiyalakshmi Serial Episode Update 06.10.21

பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Episode Update 06.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தன்னுடைய பணத்தை ஏமார்ந்த பாக்கி அவை கோபி திட்டி தீர்த்து விட்டு ஆபீசுக்கு கிளம்புகிறார். பின்னர் பாக்கியா தன்னுடைய மகன் எழில் மற்றும் மாமனாருடன் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் போலீசார் இந்த புகாரை எடுத்துக் கொள்கிறோம் ஆனால் திரும்ப பணம் கிடைக்குமா கிடைக்காதா என்பதெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது என கூறி விடுகின்றனர்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

வீட்டிற்கு வந்த பாக்கிய என்ன செய்வது என தெரியாமல் அழுகிறார். பாக்கியா விற்கு உதவி செய்த பெண்கள் வந்து பணம் வரவில்லை என்றால் அவ்வளவுதான் என மிரட்டல் விடுத்து செல்கின்றனர்.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்! | THalapathy VIjay

பாக்யாவை திட்டி தீர்த்த கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று அங்கு இவராக ஒரு கதையைத் திரித்து கூறி வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை என்னுடைய மனைவி மீது அவ்வளவு உயிராய் இருக்கிறேன். ஆனால் அவள் என்னை ஒரு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் மெஷினாக தான் பார்க்கிறார். இப்போ அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி அதனை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி அவர்களிடம் கொடுத்து ஏமாந்து போய் உள்ளார்‌.

எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எல்லாத்தையும் விட்டுட்டு இங்க ஓடி வந்து விடலாம் போல இருக்கு என ராதிகாவிடம் டயலாக் பேசி அவர் மீது சாய்ந்து கொள்கிறார். ராதிகா கோபிக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் ராதிகா மேடம் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா எனக் கேட்டுவிட்டு அவர் சென்ற பிறகு கண்களை துடைத்துக்கொண்டு உண்மையாகவே உன்னுடைய வாழ்க்கையில் பாக்கியா வேண்டுமா வேண்டாமா என அவராகவே கேள்வி கேட்டுக்கொண்டு வேண்டவே வேண்டாம் என பதில் கூறுகிறார்.

பாக்கியாவை சமாதானம் செய்து விட்டு சென்ற எழில் தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு எந்த நம்பரில் இருந்து போன் கால் வந்ததோ அந்த நம்பரை டிரேஸ் செய்து அவரை பிடிக்க திட்டம் போடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.