பணம் வந்த வேகத்தில் மொத்த பணத்தையும் ஏமாந்து போய் உள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Serial Episode Update 04.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவுக்கு 3 லட்சம் பணம் வந்ததை தொடர்ந்து இன்று பணத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க திட்டமிடுகிறார். இந்த நேரத்தில் பேங்கில் இருந்து பேசுவதாக ஒரு போன் வருகிறது. ஏடிஎம் கார்டு பிளாக்காகி இருப்பதாக கூறுகிறார். பிளாக்கை எடுக்க 16 டிஜிட் நம்பரை கேட்க பாக்கியா அதை கூறுகிறார். பின்னர் பின்புறம் இருக்கும் CVV நம்பரையும் கேட்கிறார் அதையும் கூறுகிறார் பாக்கியா. ‌ இறுதியில் OTP வர அதையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

பண்டிகை விடுமுறை :பயணிகள் கவனிக்கவும்

இந்த பக்கம் கோபி தன்னுடைய அக்கவுண்டில் பணம் எதுவும் இல்லை என ஆபிசில் வேலை செய்யும் சதீஷை அழைத்துக் கேட்கிறார். அவரை கடிந்து கொள்கிறார். என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறார்.

பின்னர் மறுநாள் ஜெனி தனக்கு வாமிட் வருவது பற்றி கூற ஈஸ்வரி பாட்டி அவருக்கு எப்படி இருக்க வேண்டும் என கூறுகிறார். அதன் பின்னர் தன்னுடைய மகன் எழிலை கூட்டி கொண்டு பேங்க் செல்கிறார். அங்கு செக் எழுதி ஆபீஸரிடம் கொடுக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலஷ்மி சீரியல் எபிசோட்.

விஜய்சேதிபதியை புகழ்ந்து தள்ளிய Bhagyaraj – வைரலாகும் வீடியோ

இந்த சீரியல் குறித்து வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் பணம் எதுவும் இல்லை என பேங்க் ஆபீஸர் கூட அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா. பணத்தை திருடியது யார் என்பது குறித்த கேள்விகளுக்கு வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.