அவமானத்தால் ஜெனியை விவாகரத்து செய்ய சொல்கிறார் செழியனின் பாட்டி.

Baakiyalakshmi Serial Episode Update 02.11.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. குடித்து விட்டு ஜெனி வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு தகராறு செய்த செழியனை ஜெனியின் அப்பா வீட்டை விட்டு வெளியே போகுமாறு அனுப்பினார். இதனால் அங்கிருந்து வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்தார் செழியன். செழியனை பார்த்த பாக்கியா என்ன ஏது என கேட்க செழியன் குடித்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செழியன் ஜெனி வீட்டுக்கு போயிருந்தேன். ஜெனி என் கிட்ட பேச கூட இல்ல. வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க என கூறுகிறார்.

அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

பிறகு எழிலும் பாக்கியாவும் சேர்ந்து செழியனை மேலே ரூமிற்கு கூட்டி செல்கின்றனர். பின்னர் பாக்கியா கோபியுடன் சென்று நடந்ததை கூறுகிறார். கோபி எல்லாம் சரியாகிடும் என பாக்கியாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். மறுநாள் காலையில் செழியன் மேலே இருந்து கீழே வர பாத்தா பாத்துட்டு எதுவும் தெரியாது நீயும் சொல்லாத என பாக்கியா கூறுகிறார்.

ஆனால் செழியன் சோகமாக இருப்பதை பார்த்த தாத்தா பாட்டி என்ன ஏது என கேட்கின்றனர். நைட்டு சரியா தூங்கல அதான் என கூறுகிறார் செழியன். அதன்பிறகு செழியன் ஜெனி வீட்டுக்கு போயிட்டு வந்ததாக கூறுகிறார். ஆனா அவங்க உள்ள கூட சேர்க்கல என கூறியதும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி பாடிய ஜெனி எங்க இருந்த அவ ஒன்னும் சொல்லலையா என கேட்க இல்லை என செழியன் சொல்கிறார். அவங்க அப்பாவுக்கு போனை போடு எனக் கூறுகிறார் ஈஸ்வரி பாட்டி. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

அதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி பாட்டி ஜெனியின் அப்பாவிடம் உங்க பொண்ணை நீங்களே வச்சுக்கோங்க அனுப்பவே வேண்டாம். உங்க செழியனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.