மீண்டும் பாக்கியாவிடம் சிக்கியுள்ளார் கோபி.
Baakiyalakshmi Episode Update 21.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. செழியன் தாக்கியவுடன் பணத்தை எடுத்து வந்து கொடுக்க அவர் எதுக்கு பணத்தை கொடுக்கிறார் என கேட்கிறார். இனிமே பணம் கேட்கிறதா இருந்தா என்கிட்ட நேராக கேளுங்க. இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு எனக்கு அஞ்சாயிரம் என் பொண்டாட்டி ஜெனிக்கு 5 ஆயிரம் என கூறுகிறார். பாக்கியா எடுடா பணத்தை என கோபமாக திட்டுகிறார். ஈஸ்வரி பாட்டி என்னடா இது இது என்ன ஓட்டலா? என கேட்டு பணத்தை செழியனிடம் கொடுத்து அனுப்புகிறார். எனக்கு உங்க அப்பா கொடுக்கிற பணத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்துவது என்று தெரியும் என கூறுகிறார்.
பிறகு ஜெனி மன்னிப்பு கேட்க வீடு எதுவும் தப்பா சொல்லி இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் என கூறுகிறார். இந்த பக்கம் எழில் அமிர்தாவின் வீட்டில் அவருடைய அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு அவர் அங்கிருந்து கிளம்ப அமிர்தா வழியனுப்ப வருகிறார். அப்போது பாட்டி பேசியதை எதுவும் பெருசா நினைத்துக் கொள்ளலல என கேட்க அதெல்லாம் ஒன்னும் பெருசா நினைக்கல என கூறுகிறார். நீங்க எனக்கு ஒரு பிரண்டு தான் என சொல்ல ஐயோ போதும் உங்க அப்பா நாங்க எதுவும் எதிர்பார்க்கவில்லை என சொல்கிறார் நீங்க ஃப்ரண்ட் தானு சொல்றீங்க. என்னால அப்படி இருக்க முடியல என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அமிர்தா சிரித்துவிட நீங்க சிரித்ததை நான் பார்த்துட்டேன் கிளம்புகிறேன் பாய் என எழில் கூறுகிறார்.
அதன்பிறகு ராதிகா வீட்டில் அவருடைய அம்மா மயூவுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் டைலர் போன் செய்து கொடுத்து துணியை வந்து வாங்கிக் கோங்க நான் ஊருக்கு போகிறேன் என கூறுகிறார். பிறகு ராதிகா அவருடைய அம்மாவை போயிட்டு வர சொல்ல அவர் எனக்கு வழி தெரியாது என தயங்குகிறார்.
அந்த நேரத்தில் கோபி வர நான் போயிட்டு வரேன் என கூறுகிறார். மயூ நானும் வருகிறேன் என கூட செல்கிறார். இவர்கள் கடைக்கு போயிட்டு வரும் நேரத்தில் ராதிகாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அந்த நேரத்தில் கோபி வர இவர்தான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போகிறார் என ராதிகாவின் அம்மா கூறுகிறார். இவர் கல்யாணம் ஆனவரா ஆகாதவரா என கேட்க இல்லை இவரும் விவாகரத்தானவர் தான். கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி விடுவோம் என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியான கோபி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். காரில் டெய்லர் கொடுத்த பில்லை கசக்கி போடுகிறார்.
இதையே நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கோபி இனியா பற்றி விசாரிக்கிறார். அதன்பிறகு அவர் மேலே சென்று விட காரிலிருந்து லஞ்ச் பேக்கை எடுக்க பாக்யா கார் அருகே செல்கிறார். அப்போது அங்கே கசக்கிப் போட்ட பேப்பரை பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.