எழிலும் அமிர்தாவும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்க கடைசியில் ஈஸ்வரியிடம் சிக்கியுள்ளனர்.

Baakiyalakshmi Episode Update 13.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஊருக்கு பணம் குடும்பத்தார் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க அந்த நேரத்தில் வந்த கோபி நான் எங்க தூங்குறது என பாக்யாவிடம் கேட்க இவர் ஆப்பை கலெக்டரு இவருக்கு எது எங்க இருக்குனனு தெரியாது என அவருடைய அப்பா நக்கல் அடிக்கிறார். அதன் பின்னர் பாக்கியா இங்கேயே படுத்து தூங்குங்க என சொல்ல இங்கே வா என கேட்கிறார். இங்கே எப்படி என கோபி செல்ல அதன்பிறகு அப்படினா உள்ள படுத்துக்கங்க என கூறுகிறார்.

பூஜை ரூம் பக்கத்துல இருக்க ரூமை அந்த எலி கரப்பான்பூச்சி எல்லாம் இருக்கும் நான் அங்க படுக்க மாட்டேன் என கூறுகிறார். நான் இங்கேயே படுத்துகிறேன் என கட்டிலில் படுக்கிறார். பிறகு எழில் செழியன் மற்றும் அவருடைய தாத்தா ஆகியோர் அந்தாசாரி விளையாடுகின்றனர். சத்தமாக பாட்டு பாடி எழிலும் அவருடைய தாத்தாவும் கோபியை கடுப்பாக்கின்றனர்.

இந்தப் பக்கம் பெண்கள் எல்லோரும் ஊர் பயணம் குறித்து பேசி விட்டு தூங்குகின்றனர். மறுநாள் காலையில் ஈஸ்வரியின் கணவர் பொங்கல் வைக்க அடுப்பு செல்கிறார். பாக்கியா செல்வி மற்றும் ஈஸ்வரி பாட்டி ஆகியோர் போகியை கொண்டாடுகின்றனர்.

அதன்பிறகு அமிர்தாவும் இனியாவும் குழந்தையை வைத்துக்கொண்டு மரத்தடியில் பேசிக்கொண்டிருக்க அங்கு எழில் வருகிறார். பிறகு இனியாவை பாக்கியா கூப்பிட அவர் அங்கிருந்து சென்று விட்டார். எழில் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு காபி கொடுக்க ஈஸ்வரி உள்ளே செல்ல அப்போது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.

பிறகு அமிர்தா எல்லோருக்கும் டீ போட்டு கொடுக்க ஈஸ்வரி பார்ட்டி பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு செல்ல கட்டப்பை கேட்டு அங்கு வருகிறார். அப்போது அமிர்தா அவருக்கு டீ கொடுக்கிறார். மேலும் எழில் தான் அடிக்கடி டீ குடிப்பார் நான் போய்க் கொடுத்துட்டு வர்றேன் என செல்ல அதெல்லாம் வேண்டாம் அவன் இப்போ தான் காபி குடித்தான் என ஈஸ்வரி பாட்டி தடுத்து விடுகிறார்.

பிறகு எழிலின் தாத்தாவும் பாட்டியும் ஜாலியாக பைக்கில் கடைக்குச் சென்று வருகின்றனர். வரும் வழியில் செழியன் மற்றும் எழில் இருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த கூலிங் கிளாசை வாங்கி ஈஸ்வரி பாட்டி போட்டுக் கொண்டு மீண்டும் கிளம்புகிறார்.

இந்தப்பக்கம் எல்லோரும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பிறகு பாக்கியமும் செல்வியின் வீட்டிற்கு உள்ளே செல்ல அப்போது கோபி யாரிடமோ போனில் சிரித்து சிரித்துப் பேசி போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பாக்கியா அப்படியே நின்று யாருடன் பேசுகிறார் என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.