சொந்த ஊருக்கு ஜாலியாக சென்றுள்ளது பாக்கியலட்சுமி குடும்பம்.
Baakiyalakshmi Episode Update 12.01.22 : தமிழ் சென்னை திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு பாக்கியலட்சுமி குடும்பம் கிளம்பிய நிலையில் போகும் வழியில் அவர்கள் அமிர்தாவை பிக்கப் செய்து செல்கின்றனர்.
எழில் ஓட்டிச் செல்லும் காரில் ஒரே ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக செல்கின்றனர். இந்த பக்கம் கோபி ஓட்டிச் செல்லும் காரில் ஈஸ்வரி பார்ட்டி மற்றும் செழியன் தூங்கிவிட இனியா ஒரே போரடிக்குது என சொல்லிக் கொண்டு செல்கிறார்.
பிறகு ஓர் இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு பக்கத்திலிருந்த கோவிலில் அமர்ந்து அனைவரும் சாப்பிடுகின்றனர். கோபி இங்கே ஒரே தூசியாக இருக்கு என சொல்லிவிட்டு காருக்குள் சென்று சாப்பிடுவதாக காரில் அமர்ந்து ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் அனைவரும் ஜாலியாக சிரித்து பேசி சாப்பிட்டுவிட்டு மகிழ்கின்றனர். அப்போது அமிர்தாவுக்கு புரை ஏற எனில் உடனே பதறிப்போய் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறார். இதனை ஈஸ்வரி பாட்டி நோட் செய்கிறார்.
பிறகு ஒருவழியாக அனைவரும் வீடு வந்து சேர்கின்றனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து தாயபாஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா அடுப்பில் இட்லி சமைத்துக் கொண்டு இருக்க கோபி ஒரே இடத்தில் நின்று ஜாலியாக ராதிகாவிடம் போன் பேசிக்கொண்டு இருக்கிறார். செல்வி சாருக்கு இங்க வந்தா கூட போன்ல பேசிட்டு தான் வேலையா வச்சு இருக்காரு அப்படி யார் கிட்ட தான் பேசுவாரோ என சொல்கிறார். பாக்கியா அவர் எங்க வந்தாலும் சந்தோஷமா இருக்கிறது இல்லை என கூறுகிறார்.
அதன் பிறகு இரவில் எல்லாம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு வெளியே கட்டில் போட்டு தூங்க தயாராகின்றனர். அப்போது வந்த பாக்கியா அத்தை நீங்க உள்ள வாங்க பனி உங்களுக்கு ஒத்துக்காது என கூறுகிறார். அப்போது வந்த கோபி பாக்கியா நான் இங்கு படுத்து தூங்குவது என கேட்க அவனுடைய அப்பா இவர் பெரிய கலெக்டர் புதுசா வந்திருக்காரு எங்க படுத்து தூங்குவது என தெரியாது பாரு என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.