எழில் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளனர் அமிர்தாவின் பெற்றோர்.
Baakiyalakshmi Episode Update 11.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தாவின் வீட்டிற்கு எழில் சென்ற நிலையில் அவருடைய அப்பா அம்மா அவரை உள்ளே வர வைத்து பேசுகின்றனர். எதுக்கு நீங்க வரவே இல்லை என கேட்க எனக்கு இங்க வர வேணாம் வேணான்னு தெரியல என் மனசுல இருக்கறத உங்ககிட்ட சொன்ன பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. நீங்க என்ன நினைக்கிறீங்க என எனக்கு குழப்பமாக இருந்தது என எழில் கூறினார்.
நீ இங்க வரதுல எங்களுக்கு என்ன பிரச்சனை? உன்ன மாதிரி ஒருத்தன் எங்களுக்கு புள்ளையா கிடைச்சா ரொம்ப சந்தோஷம் தான். ஆனா உனக்கு பின்னாடி ஒரு பெரிய குடும்பம் இருக்கு. அவங்க என்ன நெனைப்பாங்க அவங்களோட முடிவு என்னன்னு எங்களுக்கு தெரியாது. அதனால நடக்கணும்னு இருந்தா நடக்கட்டும் இல்லனா போற போக்குல போக வேண்டியதுதான். நாங்க எதையும் எதிர் பார்க்கல நீ எப்பயும் போல இங்க வா பேசு என கூறுகிறார்.
பிறகு என்ன நீங்க புரிஞ்சுகிட்டேன் அது போதும் என கூறுகிறார். நீங்க என்ன புடிக்கல ன்னு சொல்லி இருந்தாலும் நான் இப்படித்தான் வந்து பேசி இருப்பேன். அதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். அதன்பிறகு அமிர்த காபி எடுத்து வந்து கொடுக்க அவரிடம் நலம் விசாரிக்கிறார் எழில்.
பிறகு அமிர்தா பாக்யாவின் புதிய ஆபீசுக்கு சென்று அவரை பார்க்கிறார். பிறகு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியா நாங்க பொங்கலுக்கு ஊருக்கு போறோம் நீயும் வா என கூறுகிறார். அமிர்தா நா வரல நீங்க போயிட்டு வாங்க என சொல்ல அந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா போன் பண்ண அவரிடம் அமிர்தாவை அனுப்பி வைக்குமாறு கூறுகிறார் பாக்கியா.
பிறகு அமிர்தாவின் வீட்டில் இருந்து வேலை வர சொல்லி அவரிடம் பாக்கியா ஊருக்கு கூப்பிட்டு இருப்பதை சொல்கிறார். ஆமா நாங்க தென்காசிக்கு பக்கத்துல ஒரு ஊருக்கு போகிறோம். அமிர்தாவையும் ஜெனியையும் அனுப்பி வையுங்க இனியா, ஜெனி எல்லாரும் இருக்காங்க நல்லா இருக்கும் என கூறுகிறார். இல்லை அது தப்பாகி விடும் என அமிர்தாவின் பெற்றோர் கூறுகின்றனர்.
நான் இப்போ பழைய மூடுல இல்லமா.. வெறும் பிரெண்டா தான் கூப்பிடுகிறேன் என கூறுகிறார். அவங்க வந்தாலும் ஓகே வர முடியல நாளும் ஒன்னும் பிரச்சனை இல்லை என எழில் கூறுகிறார். இந்தப் பக்கம் வீட்டில் எல்லோரும் ஊருக்கு கிளம்ப போகும் வழியில் அமிர்தாவை பிக்கப் செய்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.
ஒரு காரில் கோபி, செழியன், ஈஸ்வரி பாட்டு மட்டும் இனியா ஆகியோர் செல்கின்றனர். அந்த காரில் தான் போகும்போது அமிர்தாவை பிக்கப் செய்து கொள்ளலாம் என இனியா கூறுகிறார். ஈஸ்வரி பாட்டு அமிர்தாவை எல்லாம் எதுக்கு வர சொல்லணும்? அந்தப் பொண்ணு வேற சின்ன பொண்ணு இருக்கு அப்புறம் தப்பு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்றது? எல்லாம் இந்த பாக்கியாவை சொல்லனும் என திட்டுகிறார். கோபி எழில் பிரண்டா தானே பழகுறான். அவன பத்தி நமக்கு தெரியாதா என கோபி சொல்கிறார். பிறகு செழியன் எழில் கூட அந்த பொண்ணுகிட்ட ஓவராத்தான் உருகிறான், லவ் பண்ணிடுவானோனு எனக்கே பயமா இருக்கு என்ன கூறுகிறார். உடனே ஈஸ்வரி தவிர அதெல்லாம் சும்மா சொன்னேன் என கூறிவிடுகிறார் செழியன். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.