மீண்டும் கோபி பற்றி பாக்யாவுக்கு உண்மைகள் தெரிய வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபி என்னிடம் எனக்குத்தான் பிடித்த மாதிரி வாழ்க்கை அமையவில்லை நீயாவது உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என சொன்னிங்க அதற்கு என்ன அர்த்தம் என கேட்க கோபி பாக்கியாவை திட்ட தொடங்கி விடுகிறார்.

25 வருஷத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது விதி. அப்போ என்கிட்ட ஏன் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா என யாரும் கேட்கலை பெரியவங்க சொன்னாங்க அதுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில் நானும் இருந்தேன். என்ன உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும் அதற்கு நான் என்ன பண்ண முடியும். உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்க ப்ளீஸ் என பாக்கியா கேட்கிறார். ‌‌

25 வருஷத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது விதி. அப்போ என்கிட்ட ஏன் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா என யாரும் கேட்கலை பெரியவங்க சொன்னாங்க அதுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில் நானும் இருந்தேன். என்ன உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும் அதற்கு நான் என்ன பண்ண முடியும். உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்க ப்ளீஸ் என பாக்கியா கேட்கிறார். ‌‌

ஆனால் கோபி உன்னால என்ன பண்ண முடியும் நிலையில் பேசி என்னை டென்ஷன் பண்ண தெரியும், காசு கேட்டு தொல்லை பண்ண தெரியும் உன்னால வேற எதுவும் பண்ண முடியாது நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலே போதும் அதுவே எனக்கு நீ செய்கிற பெரிய உதவி என கூறுகிறார். இந்த 25 வருட வாழ்க்கை எப்படியோ போயிடுச்சு இனியாவது சந்தோஷமாக இருக்கணும், அதுக்கு நான் என்ன செய்யணும் என பாக்கிய கேட்க கோபி திட்டமிட்டு ஆபீசுக்கு கிளம்பி விடுகிறார்.

பிறகு கோபி இனியா படிக்கும் ஸ்கூலுக்கு சென்று வெளியில் காத்துக் கொண்டிருக்கும் மயூராவை சந்திக்கிறார். மயூவை சந்தித்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் வீட்டுக்கு வந்தா அம்மா உன்னை பார்க்க விட மற்ற சீக்கிரம் இரண்டு பேருக்கும் இடையே உள்ள பிரச்சனை சரியாகிவிடும் என கூறி அனுப்பி வைக்கிறார்.

இந்த நேரத்தில் பாக்கியாவிடம் வேலை பார்க்கும் பெண் மணி ஸ்கூலுக்கு சென்றிருக்க அங்கு கோபி வேறு ஒரு குழந்தையுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். பிறகு வேலை செய்யும் இடத்திற்கு வந்த அந்தப் பெண்மணி பாக்கியாவிடம் உங்க வீட்டுக்காரரை ஸ்கூல்ல பார்த்தேன். வேறு ஏதோ ஒரு குழந்தையோட அவர் நின்னு பேசிக்கிட்டு இருந்தார் என சொல்ல இதைக் கேட்டு பாக்கியா குழப்பம் அடைகிறார். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவருடைய பிரண்டோட குழந்தையை பார்க்க வந்திருப்பார் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் வீட்டில் எழில் படம் சூப்பராக இருப்பதாக சொல்லி எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் என் முன் வந்து விட அவருக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்கிறார் ஈஸ்வரி. பிறகு வா தாத்தா கிட்ட போய் இந்த விஷயத்தை சொல்லலாம் என சொல்ல இனியா நானும் வருகிறேன் என கூட கிளம்பிச் செல்கிறார். பாக்யா இனி அவனைக் கூப்பிட்டு அப்பா ஸ்கூலுக்கு வந்திருந்தாரா? நீ ஏதாவது வரச்சொல்லி இருக்கியா என விசாரிக்க இனியா இல்ல நீ எதோ குழப்பத்துல கேட்கிற என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். இனியா இவ்வாறு சொன்னதைக் கேட்டு பாக்கியா இன்னும் குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியா கோபியிடம் பல மாதங்களுக்கு முன்னர் ஜாக்கெட் தைத்த பின் ஒன்றைக் கொடுத்து யாருக்கு ஜாக்கெட் தச்சி கொடுத்தீங்க என கேட்கிறார். நைட் டார்லிங் செல்லம் நீ பேசிட்டு இருக்கீங்க யார்கிட்ட பேசறீங்க? என் வாழ்க்கையில என்னதான் நடந்துக்கிட்டு இருக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும் என கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.