ராதிகா விவகாரத்தில் பாக்கியா வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.

Baakiyalakshmi Episode Update 08.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா ஆர்டரை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கு லேட்டான காரணத்தினால் கோபியின் அப்பா சிக்கன் சமைத்து இட்லி ஊற்றி வைக்கிறார். ஓடி வந்த பாக்கியா மாமாவுக்கு நன்றி கூறுகிறார். அதன்பிறகு அனைவரும் சாப்பிட அமர்கின்றனர். கோபி வராததால் ஈஸ்வரி பாட்டி கோபி எங்கே என கேட்கிறார்.

பின்னர் இனியாவை அனுப்பி கோபியை அழைத்து வர சொல்கிறார். இனியா மேலே போய் கோபியை அழைக்க அவர் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக வந்து கூறுகிறார். சாப்பிடுங்க பாட்டி அவர் பசிக்கும்போது வந்து சாப்பிடுவாரு என கூறுகிறார் எழில். நீ சாப்பிடலனா உங்க அம்மா சாப்பிடுவாலா? அதே மாதிரி தான் கோபி சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுவது என கூறுகிறார். சரி நான் போய் கூட்டிட்டு வரேன் என பாக்கியா சொல்ல அவருடைய மாமனார் நானே போறேன் இரு என சொல்கிறார்.

பிறகு பாக்யாவின் மாமனார் வீட்டில் அழைக்க அவர் எனக்கு பசியில்லை சாப்பிட நேரம் போய் அரை மணி நேரம் ஆயிடுச்சு என கூறுகிறார். நீங்க சாப்பிடுங்க எனக்கு வேண்டாம் என கூறுகிறார். நீ பத்து மணிக்கெல்லாம் வந்து சாப்பிட்டதே இல்லையா. இப்ப நீ வந்து சாப்பிடுற என கூறுகிறார். பிறகு கோபி அந்த சாப்பிட்டு பிறகு வெளியில் போன் பேசிவிட்டு உள்ளே வரும்போது அவரை கிண்டல் அடிக்கிறார் அவருடைய அப்பா. இந்த நேரத்தில் ஈஸ்வரி உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை எனக் கேட்க இருவரும் நீ சொல்லு நீ சொல்லு என மாறி மாறி சொல்லிக் கொடுக்கின்றனர். இந்த வயசுலயும் என்னை மிரட்டுவது நான் எங்க போறேன் என்ன பண்றேன்னு கண்காணிப்பார் என கோபி கூறுகிறார். எனக்கு இந்த குடும்பத்தோட சந்தோஷம் ரொம்ப முக்கியம் என கோபியின் அப்பா சொல்ல பதிலுக்கு கோபி அப்போ நான் சந்தோஷமா இருக்க கூடாது என கூறுகிறார்.

பிறகு கோபி மேலே சென்று விட அவருடைய அப்பா மாடிக்கு சென்று விடுகிறார். எழில் மேலே சென்று உங்களுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என கேட்க அவருடைய தாத்தா அதெல்லாம் ஒன்றுமில்லை நாக்கை அவ ரொம்ப மட்டம் தட்டுறான் அது தான் பிடிக்கல என கூறுகிறார். ‌‌

சரி நீ போய் தூங்கு என அவருடைய தாத்தா கீழே இறங்க எழில் தாத்தா எனக்கும் சில விஷயம் தெரியும். அப்பா இன்னொரு லேடி கிட்ட பேசிட்டு இருக்காரு அதானே என கேட்கிறார். உனக்கு எப்படி தெரியும் என அவருடைய தாத்தா கேட்க குன்னக்குடி போயிருக்கும்போது அங்கு அப்பா ஒரு லேடியோட வந்திருந்தார். அதன்பிறகு சென்னையிலேயே ரெஸ்டாரன்டில் ஒரு லேடியோட பார்த்தேன். அப்பா அவங்களோட பழகுவதை பார்த்தா நல்ல ரிலேஷன்ஷிப் மாதிரி தெரியல என சொன்ன அந்த பொம்பளைய உனக்கு தெரியுமா என கேட்கிறார். இரண்டு முறையும் அவங்க முகத்தை பார்க்க முடியாம போயிடுச்சு என சொல்கிறார். இன்னொரு விஷயம் அந்த லேடி யோட வீட்டுக்காரர் எங்க வீட்டுக்கு வந்திருந்தார் என நடந்ததை கூறுகிறார். இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல என கேட்க எப்படித் தான்டா சொல்றது என எழில் கூறுகிறார். அதுக்கப்புறம் நான் அப்பாகிட்ட சத்தம் போட்டு பேசினேன். அவர் எனக்கு சத்தியம் பண்ணார் இப்படி நடந்துக்க மாட்டேன் என சொல்ல அவனும் அவன் சத்தியமும் என கோபப்படுகிறார். அப்போ இன்னமும் அந்த லேடி கூட பேசிட்டு தான் இருக்கரா என எழில் கேட்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.