லட்டு ஆர்டரில் சொன்னபடி செய்து கொடுத்துள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Episode Update 07.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆர்டர் கொடுத்தவர்கள் கேட்டு வர பாக்கியா இரவு 8 மணிக்குள் கொடுத்து விடுவதாக கூறுகிறார். இன்னும் நீங்க லேட்டா செய்யவே ஆரம்பிக்கலயா என அவர் கேட்க இல்ல செஞ்சுட்டாங்க ஆனா அது சரியாக வரவில்லை என கூறுகிறார். உடனே செல்வி உண்மையா தான் சொல்றேன் வேணும்னா நீங்களே வந்து பாருங்க என அவரை அழைத்துக் கொண்டு சென்று லட்டை காண்பிக்கிறார். அதனை டைஸ்ட் பார்த்த அந்தப் பெண்மணி என்ன இப்படி கல்லு மாதிரி இருக்கு என கூறுகிறார்.

ஆமா கொஞ்சம் சொதப்பிட்டாங்க அதனாலதான் திரும்பவும் செஞ்சி தரேன்னு சொன்னேன். ரெண்டு மூணு நாளா என் பொண்ணு இனியா ஸ்கூல்ல ஒரு பிரச்சனை அதனால இங்க வர முடியல என கூறுகிறார். இங்க சாப்பாடு நல்லா இருக்குன்னு தானே எங்ககிட்ட ஆர்டர் கொடுத்தீங்க, கண்டிப்பா நைட்டு ஏழரை மணிக்கு உள்ள நாங்களே எடுத்துட்டு வந்து கொடுக்கிறோம் என்று கூறுகிறார். அவரும் சரி என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

பிறகு வீட்டுக்கு போன பாக்கியா இரவு சாப்பாட்டுக்கு சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு ஜெனியிடம் எப்படி சமைக்க வேண்டும் என சொல்லிவிட்டு மாமனார் மாமியாரிடம் கொஞ்சம் லேட் ஆகும் என சொல்லிவிட்டு இங்கே வந்து லட்டு செய்கிறார். இந்தப் பக்கம் ஜெனி சப்பாத்தியை எப்படி செய்வது என தெரியாமல் இருக்கிறார். பாட்டி கிட்ட கேட்டா திட்டுவாங்க என செல்விக்கு போன் செய்கிறார்.

போனை எடுத்த செல்வி என்னாச்சு என கேட்க சப்பாத்தி தோசை மாதிரி மூடி வேக வைக்கணுமா இல்ல ரெண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கணுமா என கேட்கிறார். செல்வி இது கூட தெரியாதா என கேட்கிறேன் தெரியாமத்தான் கேட்கிறேன் சொல்லுங்கள் என கூறுகிறார். பிறகு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எது என சொன்னதும் அப்படியே செய்கிறார் ஜெனி.

அதற்குள் கோபி வீட்டிற்கு வந்து பாக்கியா எங்கே எனக் கேட்க அவருடைய அம்மா அவ இங்க வந்தா இன்னும் வரல என சொல்ல வீட்டு வேலையெல்லாம் யார் பாப்பா என கோபி கேட்கிறார். குழந்தைக்கு பசிக்கும்ல என சொல்ல இல்ல டாடி எனக்கு பசிக்கல என இனியா கூறுகிறார். கோபியின் அப்பா அவ என்ன தினமுமா லேட்டா வர்ற இரு ஆர்டர் எடுத்து அதனால கொஞ்சம் லேட்டாயிடுச்சு வந்துவிடுவார் என கூறுகிறார்.

ஒருவழியாக லட்டுகளை செய்து முடிக்க ஆடர் செய்தவர்கள் வந்துவிட அவர்களிடம் கொடுக்கிறார் பாக்கியா. பிறகு அவர் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகிறார். இந்தப் பக்கம் ஜெனி சப்பாத்தியில் சொதப்பி வைத்துள்ளார். தாத்தா வந்து பார்த்துவிட்டு இது எப்படி சாப்பிடுவது என கூறுகிறார். 4 சப்பாத்தி தான் நல்லா இல்ல மீதி எல்லாம் நல்லா இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என கூறுகிறார்.

பிரிட்ஜில் இருக்க சிக்கனை எடு நான் சமைக்கிறேன் என சொல்கிறார். இனியா அங்கு வந்து தாத்தா உங்களுக்கு சமைக்க தெரியுமா எனக் கேட்க சாப்பிட தெரிஞ்சா சமைக்கவும் தெரியணும் என கூறுகிறார். எனக்கு தெரியாது தாத்தா என ஜெனி சொல்ல நான் உன்னை சொல்லலமா என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.