ராதிகா வீட்டுக்குச் சென்ற போது எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
Baakiyalakshmi Episode Update 06.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் கோபி அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருப்பதை பார்த்த பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். பிறகு அனைவருக்கும் ஸ்னாக்ஸ் கொண்டு வந்து கொடுக்கிறார். சாப்பிட்டு போய் படுத்து தூங்கு நாளைக்கு ஸ்கூல் போகனும்ல என இனியாவுடன் கூறுகிறார். பிறகு இனியா யாரும் ஸ்கூல்ல என்னை திட்ட மாட்டாங்களா என சொல்ல அதெல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அதுதான் எல்லோரையும் மாற்றிட்டாங்களே, அப்படியே யாராவது ஏதாவது சொன்னால் உடனே அதை வீட்டில் வந்து சொல்லணும் என அவரது தாத்தா கூறுகிறார். பின்னர் எழில் உனக்கு பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை ஃபேஸ் பண்ண உன்னோட நாங்களும் இருக்கோம் என்று நினை. உனக்கு பயமே வராது என கூறுகிறார் எழில்.
அதன்பிறகு மறுநாள் காலையில் கோபி இனியவை நானே பள்ளியில் ட்ராப் செய்து விடுகிறேன் என கூறுகிறார். பிறகு கோபி இனியாவை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார். எனக்கு சில நேரங்கள்ல வீட்டுக்கு வரவே பிடிக்காது. உனக்காக மட்டும் தான் இந்த வீட்டுக்கு வருகிறேன். நீ எனக்காக காத்திட்டு இருப்பேன்னு தெரியும் அதனால தன் நான் வருகிறேன் என கூறுகிறார். அப்போ எழில், செழியன் அண்ணாவுக்காக நீங்க வர மாட்டீங்களா என கேட்க அவங்களா வளர்ந்து பெரிய பக்கங்கள் ஆயிட்டாங்க ஆளாளுக்கு வேலைன்னு இருக்காங்க என கோபி சொல்கிறார். ஸ்கூல்ல யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க எது நடந்தாலும் நீ உடனே எனக்கு ஸ்கூல் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணு நான் உடனே அங்க வரேன் என சொல்கிறார். எனக்கு நீ தான் முக்கியம் டயலாக் விடுகிறார்.
இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கு கோர்ட்டில் இருந்து போன் வருகிறது. தற்போது காலில் அடிபட்டு இருப்பதால் என்னால் வரமுடியாது இரண்டு வாரம் கழித்து வருவதாக கூறுகிறார். அதன்பிறகு கோபியின் அம்மா இந்த முறை கண்டிப்பா டிவேர்ஸ் கிடைச்சுடும்ல என கேட்கிறார். ராதிகா இன்னும் ஒரு மாசத்துல பேப்பர் வந்துவிடும் என கூறுகிறார். நல்லது தான் என கோபி சொல்ல உடனே ராதிகாவின் அம்மா நீங்க எப்ப டிவேர்ஸ் செய்யப் போறீங்க என கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார்.
டிவேர்ஸ் தானே பண்ணனும் பண்ணுறேன் பண்ணிவிடலாம் என உளறுகிறார் கோபி. என்னை தடுமாறுறீங்க? நீங்கள் தானே உங்க வீட்டில பிரச்சனை அங்கே போகவே பிடிக்கல இங்கேதான் இருக்கப் பிடிக்காது என்று சொல்லிவிட்டு அப்புறம் என்ன என கேட்கிறார். கண்டிப்பா பண்ணுவேன் என கூறுகிறார் கோபி. அதன்பிறகு ராதிகாவிடம் அம்மா ரொம்ப அவசர பண்றாங்க என சொல்ல அவங்க இடத்தில் இருந்து யோசிச்சு பார்த்தா அது கரெக்டுதான். நான் திரும்பவும் ஏமாந்து விடக்கூடாது என நினைக்கிறாங்க. எனக்கு சில நேரங்கள்ல பயமா இருக்கு. எங்கள இங்க விட்டுட்டு போய் விடுங்களோனே. எதையும் சரியா சட்ட ரீதியா பண்றது நல்லது தானே, அம்மா சொல்ற மாதிரி சீக்கிரம் டிவேர்ஸ் பண்ணுங்க என சொல்லி ராதிகாவும் கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
இந்த பக்கம் பாக்யாவின் வேலை செய்பவர்கள் லட்டை சொதப்ப அட கொடுத்தவர்கள் வந்து லட்டு கேட்கின்றனர். இதனால் பாக்கியா இன்னைக்கு நைட் தந்து விடுகிறோம் என சொல்ல மதியமே தரேனு சொன்னிங்க என ஆர்டர் கொடுத்தவர் கேட்க பாக்கியா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.