நிகிதா தற்கொலைக்கான உண்மைகளை பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார் பாக்கியா.
Baakiyalakshmi Episode Update 01.01.2022 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா வைத்திருக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க பள்ளி நிர்வாகம் செய்த தவறையும் கம்ப்யூட்டர் மாஸ்டர் நிகிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்த உண்மைகளையும் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். இவங்கள நம்பி தானே பள்ளிக்கு அனுப்புகிறோம். பாதிக்கப்பட்ட பொண்ணு மேலேயே பழிபோட்டு அந்த கம்ப்யூட்டரை காப்பாற்ற பார்க்கிறார்கள் என கூறுகிறார்.
பிறகு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணோட தோழிகளிடம் பேசலாம் என கேமராவை திருப்ப எழில் இதனை தடுத்து விடுகிறார். போய்ட்டு பள்ளி நிர்வாகத்திடம் கேளுங்க, அந்த கம்ப்யூட்டர் சார் வீடியோ எடுத்து போடுங்கள் என்று கூறுகிறார். பிறகு பத்திரிக்கையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் அங்கு விரைகிறது.
அதன்பிறகு நிகிதா உடன் படிக்கும் மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் போலீஸ் அதிகாரி ஒரு ரூமிற்கு அழைக்கிறார். பிறகு ஆகியவை கூப்பிட்டு விசாரணை நடத்த அவர் நடந்த உண்மைகளைக் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் நிக்கிதா இனியாவுக்கு அனுப்பிய மெசேஜ்களை பார்க்கிறார். பின்னர் நீங்களே அவளோட கூட படிக்கிற பசங்களிடம் கேட்டுப்பாருங்க என பாக்கியா சொல்ல ஒவ்வொருவரையாக அழைத்து போலீஸ் விசாரணை நடத்துகிறது.
அதன்பிறகு தலைமறைவாகியுள்ள கம்ப்யூட்டர் மாஸ்டரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் பத்திரிகையாளரிடம் கூறியுள்ளனர். அவர் பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளது என கூறுகிறார். பள்ளியின் முதல்வர் உட்பட அனைவரிடமும் விசாரணை நடக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் இந்தப்பக்கம் டிவியில் பார்த்த பாக்யாவின் குடும்பத்தார் அவர் மீது பயங்கர கோபத்தில் உள்ளனர். கோபி பாக்யாவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என திட்ட செழியன் எல்லாம் எழில் கூட இருக்க தைரியம் தான் என கூறுகிறார். எழில் அம்மாவோட போகும் போதே எனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும் என கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். கோபி பயங்கர கோபத்தில் இருக்கிறார். இதனால இனியாவுக்கு கண்டிப்பா பிரச்சனை வரும் என கூறுகிறார். ஒருவரும் முறையும் நாமே போலீஸ் கிட்ட போயிட்டு உதவி கேட்டு இருக்க முடியுமா என சொல்ல அவருடைய அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது பார்த்துக்கலாம் என கூறுகிறார். ஆனாலும் கோபியின் கோபம் குறையவில்லை.
அதன்பிறகு பாக்கியா எழில் மற்றும் இனியா ஆகியோர் வீட்டிற்கு வருகின்றனர். கோபி இவர்களை முறைத்து பார்க்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.