இனியாவின் தோழி மீது பள்ளி நிர்வாகம் பழி போட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா அம்மாவும் அமைதியாக இருப்பது பாக்கியாவை கோபமடையச் செய்தது.

Baakiyalakshmi Episode Update 30.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மருத்துவமனைக்குச் சென்ற பாக்கியா நிகிதாவின் அப்பா அம்மாவிடம் எல்லாத்துக்கும் காரணம் அந்த கம்ப்யூட்டர் சார் தான் அவரை சும்மா விடக்கூடாது அவர்மேல கம்ப்ளைன்ட் கொடுங்க என கூறுகிறார். உடனே அவரது பெற்றோர்கள் எதுக்கு எல்லாரும் என் பொண்ண தான் தப்பா பேசுவாங்க. அவ இப்படி படுத்துக் கிடக்கும் போது யார் எப்படி போனால் என்ன எங்கள நிம்மதியா விடுங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் பாக்கியாவும் இனியாவும் வீட்டுக்கு வராமல் இருப்பது பற்றி வீட்டில் உள்ள அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கோபியும் வந்து பாக்கியா பற்றி கேட்க அவர்கள் இன்னும் வரவில்லை என கூறுகிறார். பிறகு பாதிக்கப்பட்ட அந்த பெண் எப்படி இருக்கா என கேட்க வைத்திருக்க யாரையும் பார்க்க விடவில்லை என கோபியின் அப்பா கூறுகிறார். மேலும் செய்தி மாடல் எக்ஸாம் மார்க் கம்மியா ஆனதால் பப்ளிக் எழுத முடியாது என்ற பயத்தில் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக பள்ளி நிர்வாகம் கூறியதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் இதுக்கு கூடவா தற்கொலை பண்ணிக்குவாங்க என பேசுகின்றனர்.

அதன்பிறகு எழில் வீட்டுக்கு வந்ததும் ஏன் என்கிட்ட யாரும் இந்த விஷயத்த சொல்லல என கேட்கிறார். சரி நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன் என கிளம்ப அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வந்துவிடுகிறார். பிறகு இனியா ஸ்கூல்ல சொன்னது எல்லாமே பொய் என சொல்லி அழுகிறார். பிறகு பாக்கியா கம்ப்யூட்டர் சார் பெண்களுக்குக் கொடுத்த டார்ச்சர் பற்றி கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். செழியன் உனக்கு எதுவும் பிரச்சனை இல்லல இனியா என கேட்கிறார். அதுவும் நம்ம பொண்ணு மாதிரி தானே எப்படி சும்மா விடுறது என பாக்கியா கூற நாம என்ன பண்ண முடியும் அவங்க வீட்டுல தான் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என கோபி கூறுகிறார்.

பிறகு பாக்கியா செழியனிடம் அவங்கள சும்மா விடக்கூடாது என பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணை நினைத்து கண் கலங்குகிறார். அதன்பிறகு கோபியிடம் சென்று நடந்த விஷயங்களை பேசுகிறார். அந்த சார் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என்று கேட்கிறார். அதெல்லாம் அவங்க பேரெண்ட்ஸ் தான் கொடுக்கணும். இந்த வருஷம் போகட்டும் அடுத்த வருஷம் ஸ்கூலை மாற்றிவிடலாம் என கூறுகிறார். நீ போய் இனியா ஓட இரு என கூறி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.