எழில் உண்மையை சொல்ல ஈஸ்வரி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா மயூவை சமாதானப்படுத்த அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தேன் ராஜேஷ் என் பொண்ணு என்கிட்ட வர்றதுக்கு எல்லா வேலைகளையும் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் கூடிய சீக்கிரம் அது நடக்கும் அதுக்கு தயாராக இரு என எச்சரித்து விட்டு செல்கிறார். இது எல்லாத்துக்கும் ஒரே வழி நீ கோபியை கல்யாணம் பண்ணிக்கிறது தான் என ராதிகாவின் அண்ணா சொல்கிறார்.

இந்த பக்கம் எழில் தாத்தாவிடம் அழுது புலம்பி இப்போ என்ன செய்வது பாட்டி கேட்டா என்ன பதில் சொல்வது என தெரியாமல் எழுந்து வெளியே வர ஈஸ்வரி கோபி பற்றி ஒருத்தன் தப்பா சொல்லிட்டு போறான், அவனை எதுக்கு போக விட்ட என சத்தம் போடுகிறார். இதுவே பாக்கியாவை ஏதாவது சொல்லி இருந்தா அவனை எகிறி அடிப்ப, கோபி அப்படி தப்பு பண்ணா உங்களுக்காகத்தான் உழைக்கிறான் என ஈஸ்வரி அழ, எனில் எதையும் சொல்லாமல் அமைதியாகவே நிற்க உள்ளே இருந்து வந்த கோபியின் அப்பா அவன் சொன்னதெல்லாம் உண்மைதான். கோபிக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருக்கு அது எனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும்.

உங்க தாத்தா சொல்றது உண்மையா என ஈஸ்வரி கேட்க ஆமா பாட்டி நான் அவரை ஒரு பொண்ணோட பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன் என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சடைந்து கோபிக்கு போன போட்டு வர சொல்லு என சொல்ல யாரும் போகாததால் ஈஸ்வரியே கோபிக்கு போனை போட்டு வீட்டுக்கு வர சொல்கிறார். இந்தப் பக்கம் இனியா நான் போய் அப்பாவ கூட்டிட்டு வரேன் என சமைக்கும் இடத்திற்கு ஓடுகிறார்.

இந்த பக்கம் கோபி அம்மாவுக்கு என்ன விஷயம் தெரிந்தது என தெரியலையே என்று பதற்றத்தோடு காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.