கோவிலில் எழில் பூ வைத்து விட அமிர்தா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 30.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஒரு மணி நேரத்தில் 100 டிஷ் சமைக்கப் போவது கோபி கண்டிப்பா உன்னால சமைக்க முடியாது அசிங்கப்பட்டு தான் இருக்கப் போற என திட்டி விட்டு, வீட்டுக்கு வர பிடிக்கவே இல்ல என எழுந்து உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு எழில் கண்டிப்பா நீ ஜெயிப்ப, உன்னால முடியும் இது வரைக்கும் அப்பா உன்னை திட்டி நீ ஜெயிச்சு காட்டி தான் இருக்க என கூறுகிறார். பிறகு கோபியில் அப்பாவும் பாக்யாவுக்கு தைரியம் கூறுகிறார். அதன்பிறகு பாக்கியா ரூமுக்குள் கோபியிடம் பயமா இருக்கு என புலம்ப அவர் கீழே இதைத்தான் நான் சொன்னேன் எல்லோரும் என்ன கொத்த வந்தீங்க என திட்டுகிறார். பிறகு பாக்கியா தூங்காமல் தனியாக புலம்ப கோபி இதைக் கேட்டு திட்டுகிறார். இந்த போட்டியில தோத்துட்டா வந்து என்கிட்ட புலம்பாத அப்ப நான் மனுசனா இருக்க மாட்டேன் என கூறுகிறார்.
இந்த பக்கம் எழில் அமிர்தாவுடன் நிலா பாப்பாவை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் அங்கு ஜானு வருகிறார். எழில் குழந்தையை தூக்கிக்கொண்டு பிரசாதம் வாங்கி வர செல்ல அப்போது ஜானு அமிதாப்புடன் நீங்க லக்கி எழில் உங்கள லவ் பண்ண நீங்க கொடுத்து வச்சுருக்கணும். நான் அவனை எவ்வளவோ முயற்சி பண்ணினேன் அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணி அவங்க உங்களை எவ்வளவு லவ் பண்றேன்னு சொன்னான்.
இதைக் கேட்ட அமிதா நான் வேணும்னா அவன்கிட்ட உங்கள பத்தி சொல்லவா என கூற உங்களுக்கும் லவ் இருக்கு, சும்மா நடிக்காதீங்க. எழிலை அலைய விடாமல் ஓகே சொல்லி அவனோட வாழப் பாருங்கள் என கூறுகிறார். அதன்பிறகு மீண்டும் சாமி கும்பிட சென்ற போது பூசாரி பூ கொடுக்க அமிர்தா தயக்கத்தோடு நிற்கிறார். எனக்கு ஏறி பூவை வாங்கி அமிர்தாவின் தலையில் வைத்து விடுகிறார். பிறகு அமிர்தா கண் கலங்க என்னாச்சு என கேட்க கணேஷ் போனதில் இருந்து நான் பூ வைப்பதில்லை. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க இருங்க என கூறுகிறார். பிறகு கையை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
வீட்டுக்குப் போன அமிர்தா எழில் கையை பிடிக்கிறார். நம்பலாமா எனக் கேட்க கண்டிப்பா நீங்க என்னை நம்பலாம் என்னைக்கும் நான் உங்க பக்கத்துல இது அன்போட இருப்பேன் என எழில் கூறுகிறார். தலையில போய் இருப்பதை பார்த்து வீட்டில் என்ன சொல்வார்கள் என தெரியல என சொல்ல வைக்கக் கூடாது என்று சொல்லுவாங்களா என கேட்க இல்ல நானா தான் வைப்பதில்லை என கூறுகிறார் அமிர்தா. நம்ம அம்மா அப்பா அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.