பாக்யாவிடம் இனியா உண்மையை சொல்ல அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 28.12.21 : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனிய ரூமுக்குள் அமர்ந்து அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் பாக்கியா வர கண்ணை துடைத்துக் கொண்டு படுத்து விடுகிறார். பாக்கியா என்ன ஏது என கேட்க அதன் பிறகு எழுந்த இனிய அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார். நிக்கிதா செத்துப் போக போறேன்னு சொல்லி போனை வைத்து விட்டார் என கூறுகிறார். பாக்கியா ஏன் என்ன பிரச்சனை என கேட்க கம்ப்யூட்டர் சார் அவளை ரொம்ப டார்ச்சர் செய்கிறார். தப்பு தப்பா மெசேஜ் அனுப்புகிறார் என கூறுகிறார். எங்கள கூட கூப்பிட்டு மிரட்டினார் என்று இனியா சொல்கிறார். நிக்கிதா வீட்ல சொல்ல வேண்டியதுதானே என பாக்கியா சொல்ல அவங்க வீட்டுல அவளை தான் திட்டுவாங்க என கூறுகிறார்.
அதன்பிறகு பதட்டமான பாக்கியா நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன் என கூறுகிறார். வேணாம் அந்த சார் என்ன பரீட்சை எழுத விட மாட்டாரு இன்டர்னல் மார்க் போடமாட்டார் என சொல்ல அதை நான் பாத்துக்கறேன் என கூறுகிறார். பிறகு இனி அவை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். இந்த விஷயத்தை கோபி இடமும் எழில் இடமும் சொல்ல வேண்டுமென பாக்கியா முடிவு செய்து கோபியின் ரூமுக்கு செல்ல அவர் தூங்கி விடுகிறார். அதன்பிறகு எழிலை பார்க்கச் செல்ல எழிலும் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் இருக்க அவர் இதே யோசனையில் இருக்கிறார். செல்வியின் இனி ஆகும் என்ன ஏது என கேட்க பாக்கியா நிகிதா பற்றி கூறுகிறார். செல்வி எங்க வீட்டு பக்கத்துல கூட ஒரு பொண்ணு தூக்கு மாட்டி செத்துப் போய்ருச்சு. வயிறு வலின்னு சொன்னாங்க அப்புறம் தான் தெரிஞ்சது ஏதோ சார் ஒருத்தர் அந்த பொண்ணு டார்ச்சர் பண்ணி இருக்கார். கேஸை கூட எடுக்க காணோம். அந்த சார் ஜாலியா தான் சுத்திகிட்டு இருக்காராம் என கூறுகிறார்.
கொஞ்ச நேரத்தில் இனியா மேலே இருந்து அம்மா அம்மா என அழுது கொண்டே ஓடி வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் சூழ்நது கொண்டு என்ன ஏது என கேட்க நிகிலா தூக்கு மாட்டிக் கொண்டார் என கூறுகிறார். இப்போ எப்படி இருக்கிறாய் எனக் கேட்க ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்களாம் என கூறுகிறார். நான் இப்பவே நிகிலாவை பார்க்கனும் என இனியா அழுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.