நீ தனி மரமாக நிற்ப என்று ராமமூர்த்தி கோபியை பார்த்து சாபம் விட்டு உள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு வீட்டுக்கு வர ராதிகா குடிச்சிட்டு வந்திருக்கீங்களா என்று கோபப்பட, கோபி ஏன் அம்மா என்ன விட்டு போய்ட்டாங்க என்று புலம்ப ராதிகா உங்க அம்மா நம்ப குழந்தையே இல்லாம பண்ணி இருக்காங்க அது உங்களுக்கு கவலை இல்லையா என்று கேட்க என் அம்மா அப்படி பண்ண மாட்டாங்க என்று சப்போர்ட் செய்ய போதும் நிறுத்துங்க, உங்க அம்மா தான் முக்கியம்னா கிளம்பி அங்கேயே போயிடுங்க என கோபப்படுகிறார். 

மறுநாள் காலையில் ராமமூர்த்தி மற்றும் பாக்யா வாக்கிங் வர கோபி எதிரே வந்து தொக்காக மாட்ட அவரைப் பிடித்து ராமமூர்த்தி பயங்கர கோபம் அடைகிறார். உன்னால ஒருத்தராவது நிம்மதியா இருக்க முடியுதா? உங்க அம்மா மேல கொலைக்காரி பட்டம் கட்டி இப்போ படுத்த படுக்கையா படுக்க வச்சுட்ட.. நீ நல்லாவே இருக்க மாட்ட ஒரு நாள் யாருமே இல்லாம தனிமரமா நிற்ப என்று சாபம் விடுகிறார். 

அடுத்ததாக ஈஸ்வரியை சமாதானப்படுத்தி ஒரு வழியாக பாக்யா அவரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் கிளம்ப இதை பார்த்த கோபி ஓடி வந்து அம்மா எங்க போறாங்க என்று கேட்க எழில் கோபப்பட செழியன் கும்பகோணம் போறாங்க என்று பதில் சொல்கிறார். அவங்கள எதுக்கு கூட்டிட்டு போகணும் அவங்களுக்கே ஏற்கனவே உடம்பு சரியில்ல என்று கோபி பேச செழியன் இங்கேயே உட்கார்ந்து நீங்க சொன்னது நெனச்சு வருத்தப்பட சொல்றீங்களா என்று திட்டி அனுப்புகிறார். 

அடுத்து கோபி வீட்டுக்கு வர ராதிகா, அவரது அம்மா மற்றும் மயூயுடன் வெளியே கிளம்ப கோபி எங்க போறீங்க என்று கேள்வி கேட்க ராதிகா பதில் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.