சீக்கிரம் கோபியை விவாகரத்து வாங்க சொல்கிறார் ராதிகா.

Baakiyalakshmi Episode Update 25.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி என் அப்பாவும் அம்மாவும் அமர்ந்து கொண்டிருக்க கோபி சாப்பிடாமல் போனது பற்றி கூறி வருத்தப்படுகிறார் அவருடைய அம்மா. அதெல்லாம் அவன் வெளியே நல்லா வக்கனையா சாப்பிட்டு விட்டுத்தான் போவான் என கோபியின் அப்பா கூறுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா கையில் போட்டோவுடன் கீழே இறங்கி வருகிறார்.

ஈஸ்வரி எங்க போயிருந்த இவ்வளவு நேரமா என கேட்க மேல இருந்தேன் என கூறுகிறார். இந்தாங்க மாமா நீங்க கேட்ட போட்டோஸ் கிடைச்சுடுச்சு என கொடுக்கிறார் பாக்யா. எங்கம்மா இருந்தது என கேட்க அவருடைய ரூம்லதான் பீரோ மேல இருந்தது என கூறுகிறார். அவருடைய நடவடிக்கை இப்போ சரி இல்ல மாமா என கூறுகிறார். நான் போட்டோ எங்கே என்று கேட்டதற்கு எங்கவச்சனு தெரியலைன்னு சொன்னாரு. ஆனா ரூம்ல போய் போட்டோ இருக்கான்னு மேல ஏறி பார்க்கிறார். நான் உள்ள போனதும் எல்லாத்தையும் மறைத்து வைத்து விட்டு கீழே இறங்கி விட்டார். ‌‌ போட்டோ விஷயத்துல எதுக்கு மாமா அவர் அப்படி பண்ணனும் என பாக்கியா கேட்க ஈஸ்வரி கோபிக்கு வக்காலத்து வாங்குகிறார். ராதிகா, மய்யூ வீட்டுக்கு வந்தா மாட்டிடுவானு பிராடு பையன் போட்டோவை மறைச்சு வச்சு இருக்கான் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார் கோபியின் அப்பா. பிறகு கோபி பற்றி பாக்யா சொல்வதைக் கேட்டு அவரைத் திட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார் ஈஸ்வரி. அவன் என்னைக்கு சரியான நடந்திருக்கான்? விடு இந்த வயசுல சில ஆம்பளைங்க இப்படித்தான் கிறுக்குப் பிடித்து அலைவானுங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் கோபியும் ராதிகாவும் காரில் வெளியே சென்றிருந்த போது மயூ திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறுகிறார் ராதிகா. இதைக் கேட்ட கோபி அப்படியா மயூவுக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா என கேட்கிறார் இருந்தாலும் அம்மா ரிலேட்டிவ் முன்னாடி அப்படி சொன்னது எனக்கு ஷாக்கா இருந்தது கோபி சொல்ல 10 மணிக்கு ஒருத்தர் அட்ரஸ் வாங்கிட்டு வந்தா அவங்க என்ன நெனைப்பாங்க அதனாலதான் அம்மா அப்படி சொன்னாங்க என்ன சொல்கிறார்.

சீக்கிரம் டிவர்ஸ் வாங்குங்க கோபி பிடிக்காத லைஃபை எதுக்கு இழுத்துட்டு இருக்கணும் என கூறுகிறார் ராதிகா. அதெல்லாம் பெரிய பிராசஸ் இல்லை என கோபி சொல்ல என்ன ஒரு வருஷம் ஆகும் என ராதிகா கூறுகிறார். பிறகு கோபி தன்னுடைய நண்பரை சந்தித்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறுகிறார். எனக்கு என் அம்மாவும் இனியாவும் மட்டும் கூட வந்து விட்டால் போதும். அவங்க இல்லாம என்னால இருக்க முடியாது என சொல்கிறார். இதெல்லாம் சரியாக படவில்லை என அவருடைய நண்பர் சொல்ல உனக்கு சரியா படனும்னு என்ன இருக்கு? என்னோட முடிவு இதுதான் என கூறுகிறார்.

வீட்டுக்கு வந்த கோபி இனியா, எழில், ஈஸ்வரி, பாக்கியா ஆகியோர் இருக்கும் போது அப்பா ஒருவேளை வேலை விஷயமா வேற ஊருக்கு போய் தங்கி டா நீ என்னடா பண்ணுவ என கேட்கிறார். பாக்யா ஈஸ்வரி அப்படி ஏதாவது திட்டம் இருக்கா என்ன அதெல்லாம் வேண்டாம் என கூறுகின்றனர். கோபி இல்ல சும்மா கேட்கிறேன் என சொன்ன இனியா என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது டாடி, நீங்க எங்க போனாலும் நான் உங்களோடவே வந்துவிடுவேன் என்று கூறுகிறார். லட்டு அப்போ நாங்க எல்லாம் வேண்டாம் என எழில் கேட்க நான் வீக்லி ஒரு முறை வந்து உங்களை பார்க்கிறேன் என சொல்கிறார்.

என்ன பாக்காம நீ இருப்பியா என பாக்யா கேட்க அதெல்லாம் இருப்பின் டாடிய பார்க்காமல் தான் இருக்க மாட்டேன் என சொல்கிறார். பசிக்குதுன்னு என்கிட்ட வருவல அப்போ வச்சிக்கிறேன் என பாக்கியா திட்டி விட்டு உள்ளே செல்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் உன்னை யோசிச்சுத்தான் எடுப்பேன் என கோபி மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.