ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு மாணவிகள் உள்ளாகும் நிலையில் இனியா வீட்டில் சொல்லாமல் முடிவு எடுத்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 24.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பள்ளியில் இனியா மற்றும் அவரது தோழிகள் இன்னொரு தோழிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவருடைய தோழி மிகுந்த சோகத்தோடு வந்து அமர்கிறார். என்ன எது எனக் கேட்க பள்ளியில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் சார் அடிக்கடி தன்னை அளவிற்கு கூப்பிட்டு தொட்டு தொட்டு பேசுகிறார் என கூறுகிறார். எனக்கு மெசேஜ் பண்றார். நான் திரும்பவும் ரிப்ளை பண்ணலனா மறுநாள் திட்டுகிறார். எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல என கூறுகிறார்.
பிரின்ஸ்பல் மேடம் கிட்ட சொல்லி விடலாமா என கேட்க மற்ற தோழிகள் வேண்டாம் நம்ப மாட்டாங்க, அப்புறம் நம்ம ஸ்கூல்ல விட்டு அனுப்பிடுவாங்க என கூறுகின்றனர். இதே சிந்தனையில் வீட்டிற்கு வரும் இனியா யாரிடமும் எதுவும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார். பாக்கியா என்னாச்சு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சொல்லு என கேட்டும் ஒன்னும் இல்லை என கூறி விடுகிறார்.
வீட்ல சொன்னா ஸ்கூல்ல வந்து சண்டை போடுவாங்க ஸ்கூலை விட்டு அனுப்பிடுவாங்க பத்தாவதுல வேற ஸ்கூல்ல சேர்த்துக்க மாட்டாங்க சொல்ல வேண்டாம் என முடிவு செய்து விடுகிறார். மறுநாள் மீண்டும் பள்ளியில் இனியாவின் தோழியை அந்த ஆசிரியர் அழைத்து எதையோ பேசியதாக வந்து கூறுகிறார். நேத்து எனக்கு போன் பண்ணிக்கிட்டே இருந்தார் நான் எடுக்கல, அதனால திட்டுகிறார். இங்க பேசுறத வெளியில் சொல்லக்கூடாது என சொல்கிறார். என் போட்டோவை எல்லாம் கேட்கிறார் என கூறுகிறார்.
அப்போ பிரின்ஸ்பல் மேடம் கிட்ட சொல்லி விடலாம் என் இனியா கேட்க நம்புவார்களா என அவருடைய தோழி கேட்கிறார். அதான் அவரு உனக்கு அனுப்புன மெசேஜ் கால் எல்லாம் இருக்குல்ல அத காட்டலாம் என கூறுகிறார். அவருடைய தோழிகளும் இதுதான் சரியான சொல்வதால் இனியா தன்னுடைய தோழியை கூட்டிக்கொண்டு பிரின்ஸ்பல் மேடம் ரூமிற்கு செல்கிறார்.
ஆனால் அங்கு ஒரு ஆசிரியை இவர்களைத் தடுத்து பிரின்சிபல் மேடம் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார். கம்ப்யூட்டர் சார் பத்தி அவங்க கிட்ட சொல்லனும் என கேட்க அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் சார் வந்து விடுகிறார். என்னை பத்தி என்கிட்ட தானே பேசணும் என கூறுகிறார். உடனே பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து கிளம்பி விட பின்னாடியே அனைவரும் கிளம்பி விடுகின்றனர்.
இந்த பிரச்சனையில் எதையும் சாப்பிடாமல் அப்படியே சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வருகிறார் இனியா. இதைப்பார்த்து பாக்கியா என்ன பிரச்சனை? ஏன் சாப்பிடல? என கேள்வியாக கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.