மய்யூடன் பாக்கியா வீட்டு ஃபங்ஷனுக்கு சென்றுள்ளார் ராதிகாவின் அம்மா.

Baakiyalakshmi Episode Update 20.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகாவிற்கு ஆபிசிலிருந்து போன் மேல போன் வருகிறது. நீங்க இப்படி பண்ணிட்டீங்களே என அவரை ஒவ்வொருவராக போன் செய்து திட்டுகின்றனர். இதனால் அவருக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது கோபியின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் கண் கலங்கி அழும் நேரத்தில் மயூ புதிய டிரஸ் அணிந்து எப்படி இருக்கு என கேட்கிறார். உடனே ராதிகா சூப்பரா இருக்குடா என சொல்ல பாட்டு எடுத்து கொடுத்தாங்களே அதுதான் என கூறுகிறார். தெரியுமே என ராதிகா சொல்கிறார். பிறகு ராதிகாவின் அம்மாவும் ரெடியாகி வந்து நிற்க எங்க கிளம்பிட்டீங்க என கேட்கிறார். மம்மி உங்களுக்கு ஞாபகம் இல்லையா என மயூ கேட்கிறார்.

பாக்கியா ஆண்ட்டி வீட்டு பங்ஷனுக்கு போய்ட்டு வர சொல்லி நீங்க தானே சொன்னீங்க. எனக்கு கூட பாக்க பெருசா விருப்பம் இல்ல நீ சொன்னையே நான் கிளம்புறேன் என அவருடைய அம்மா கூறுகிறார். 10 மணிக்கு பங்ஷன் ஆனா இப்போ 12 ஆயிடுச்சு என மயூ சொல்ல அதெல்லாம் ஆன்ட்டி புரிஞ்சுபாங்க டா என கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி விழாவிற்கு வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு மய்யூ மற்றும் ராதிகாவின் அம்மா வருகின்றனர். இவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தார் இனியா. பிறகு பாக்கியா இவர்களிடம் பேசும்போது மயூ குரலைக் கேட்டு விட்டு திரும்பி பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி.

பிறகு இவர்கள் உள்ளே சென்றதும் கோபி வெளியே செல்கிறார். கோபி பதற்றமாக இருப்பதை பார்க்க செழியன் என்னாச்சு என கேட்க ஒண்ணுமில்ல என கூறி சமாளித்து விடுகிறார். பிறகு இனியா வந்து மய்யூ மற்றும் ராதிகாவின் அம்மாவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள கோபியையும் செழியனையும் அழைக்கிறார்.

செழியன் உள்ளே செல்ல கோபி எனக்கு ஒரு முக்கியமான கால் பேச வேண்டியது இருக்கு என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு இவர்களைப் பார்த்த ராதிகாவின் மாமனார் இவர்கள் கண்ணில் படக்கூடாது. நான் பாக்யாவின் மாமனார் என இவர்களுக்கு தெரியாது என அவர் தலைமறைவாகி விடுகிறார்.

இந்தப் பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் மன்னிப்பு கேட்க அவர் கோபப்படுகிறார். எல்லாத்துக்கும் இந்த சாரி ஒன்னு சொல்லிடறீங்க என கூறுகிறார். உங்கள நம்பி ஒரு விஷயம் செய்ய முடியுதா? ஒரு கமிட்மென்ட் கொடுக்குறீங்க கடைசி நேரத்துல இருக்க மாட்டீங்க. முடியாதுனா முடியாதுன்னு வெளிப்படையா சொல்லி இருக்கலாம் இல்ல என கூறுகிறார். நான் எதுவும் தெரிஞ்சு செய்யல தற்செயலா நடந்ததுதான் என கோபி சொல்ல தயவுசெய்து கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என ராதிகா திட்டி விடுகிறார்.

அதன் பின்னர் வீட்டில் அனைவரும் போட்டோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி வருகிறார். கோபி வந்ததும் ஆளாளுக்கு அவரைக் கேள்வி கேட்கின்றனர். திடீர்னு யார்கிட்டயும் சொல்லாமல் எங்கப்பா போயிட்ட என அவருடைய அம்மா கேட்கிறார். ஏன்பா பங்க்ஷன்ல சந்தோஷமாக இல்லை என செழியன் கேட்கிறார். உடனே கோபியின் அப்பா அதுவும் ராதிகா வீட்டில் இருந்து வந்ததும் கிளம்பிட்டான் என கூறுகிறார்.

கோபி ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சனை அதுதான் டென்ஷனாகவே இருந்தேன். சீக்கிரமா கிளம்பி போயிட்டேன் என கூறுகிறார். எப்ப பார்த்தாலும் டென்ஷன் டென்ஷன் பேசாம அந்த ஆபீஸ இழுத்து மூடிடு என கோபியின் அப்பா சொல்ல கோபி மூடிட்டு என்ன செய்றது என கேட்கிறார். அதான் பாக்கியா புதுசா பிசினஸ் தொடங்கியிருக்கால அதை பார்த்து கூறுகிறார்.

உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா நல்லா பண்ணுங்க என்ன சீண்டாதீங்க நல்லா இருக்காது என சொல்லிவிட்டு அவர் மேலே செல்கிறார். ஏன் அவன் கிட்ட அப்படி பேசுறீங்க என ஈஸ்வரி ஒரு பக்கம் கேட்க இன்னொரு பக்கம் பாக்கிய ஏன் மாமா இப்படி பேசுறீங்க என கேட்கிறார். நான் என்னம்மா பேசினேன் என அவர் உள்ளே எழுந்து போய் விடுகிறார். பிறகு ஈஸ்வரி பாக்கியாவிடம் வெந்நீர் கொண்டு வா என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.