இனியா வீடியோ காலில் கோபியை பார்த்ததை போட்டுக் கொடுத்துள்ளார் மய்யூ.

Baakiyalakshmi Episode Update 20.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகாவுடன் கோபி ரொமான்ஸாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாக்கியா. தன்னுடைய பிரெண்டிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதைப்பற்றி எதுவும் தப்பாக நினைக்காதே என் அப்பாவிடம் சொல்லி அவரை வெளியே அனுப்பி வைத்தார் கோபி. பிறகு ஒரு போன் கூட நிம்மதியா பேச முடியாம என கதவை சாத்தி விட்டு மீண்டும் ராதிகாவிற்கு போன் செய்தார்.

ஒரு பூனை என் பொண்டாட்டி வளக்குற கருப்புப் பூனை உள்ள வந்துருச்சு, இப்போ வெளியே அனுப்பிட்டேன். இதுக்கு அப்புறம் ஒன்னும் பிரச்சினை இல்லை என ராதிகாவிடம் பேசினார். கோபி போனில் பேசியதை பார்த்த பாக்கியா அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். செல்வி கோபி பற்றி பேச பாக்கியா போய் வேலையை பாரு எனக்கு தலைவலியா இருக்கு என கோபப்படுகிறார்.

அதன்பிறகு கோபி கீழே இறங்கி வர தோசை ஊற்றவா என பாக்கியா கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புறேன் என கோபி விசிலடித்து கொண்டு சந்தோஷமாக கிளம்புகிறார். நேராக ராதிகாவின் வீட்டிற்கு போன கோபி மய்யூவிற்கு பொம்மைகளை வாங்கிக் கொண்டு செல்கிறார். தான் மைசூர் சென்று விட்டதாக கூறுகிறார். பிறகு அடுத்த முறை நாம கிராமத்துக்குப் போய் பொங்கல் கொண்டாடலாம் என மய்யூ கூறுகிறார்.

ஏன் என கோபி கேட்க இனியா அக்கா வீடியோ கால் பண்ணி இருந்தாங்க அப்போ அங்க பொங்கல் சூப்பராக இருந்தது. அந்த வீடியோ கால்ல அப்படியே உங்கள மாதிரி ஒரு அங்கிளை பார்த்தேன் என மய்யூ சொல்ல அதிர்ச்சி அடைகிறார். அது நான் இல்ல அங்கிள் பார்க்காமல் இருப்பதுதால என்ன மாதிரி உனக்கு தெரிஞ்ச இருக்கும் என கோபி சமாளித்து வருகிறார். அன்னையிலிருந்து இதையேத்தான் சொல்லிட்டே இருக்கா என ராதிகா கூறுகிறார். நான் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம் என்று நினைச்சேன். ஆனால் எடுக்க முடியல என கூறுகிறார். கோபி ஜஸ்ட் மிஸ் என அதிர்ச்சி அடைகிறார்.

இந்தப் பக்கம் பாக்கியா பட்ஜெட் போட்டு மளிகை கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஜெனி ஏன் இவ்வளவு கம்மியா வாங்குறீங்க? அதுவும் வேற வேற இடத்துல வாங்குறீங்க? என் கேட்க பாக்கியா பண பிரச்சனை பற்றி கூறுகிறார். எழில் எப்போவாவது பணம் தருவான். மாமா அவரோட, அத்தையோட மருந்து மாத்திரை செலவுகளை பார்த்துப்பார் என கூறுகிறார்.

பிறகு ரூமுக்கு போன ஜெனி செழியனிடம் நீ செலவுக்கு கொஞ்சம் பணம் தரலாம்ல என கூறுகிறார். அம்மா நான் பணம் தரலனு சொன்னாங்களா? என செழியன் கோபமாக கீழே இறங்கி போய் பாக்கியசாவிடம் பணம் கொடுக்கிறார். ஜெனி கிட்ட நான் வீட்டு செலவுக்கு பணம் தரது இல்லனு சொன்னனீங்களாமே என பணத்தை கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.