40 லட்சம் பணம் கேட்டு கோபிக்கு சவால் விட்டு வெளியே அனுப்பி உள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொல்ல பொறுமை இழந்த பாக்கிய அந்த 40 லட்சம் ரூபாய் பணத்தை நான் தருகிறேன் என கூறுகிறார். நாலாயிரம் நாற்பதாயிரம் இல்ல 40 லட்சம் அதுக்கு எத்தனை சைபர்னு உனக்கு தெரியுமா? என கோபி மக்களாக பேச எனக்கு உங்கள மாதிரி நக்கலா பேச தெரியாது உங்களுக்கு தேவை 40 லட்சம் பணம் தானே அதை நான் தரேன் என சொல்ல எப்படி தருவ? எப்போ தருவ என கேட்க எப்படி தருவேன் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எண்ணி ஒரே வருஷத்துல அந்தப் பணத்தை நான் தருவேன் ஒருவேளை ஒரு வருஷத்துல தர முடியலன்னா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.

நீங்க இத நம்பாம கூட போகலாம் போயிட்டு பாண்டு பேப்பரை வாங்கிட்டு வாங்க கையெழுத்து போட்டு தரேன் என சொல்ல ஈஸ்வரி பாக்யா நீ தப்பு மேல தப்பு பண்ற என சொல்ல பணம் கேட்டது நான் இல்லையே அத்தை அவர் கேட்டாரு நான் தரேன்னு சொல்றேன் என கூறுகிறார்.

பிறகு கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லு அப்போ மீட் பண்ணலாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியே செல்ல இனியா, செழியன், ஈஸ்வரி என எல்லோரும் தடுத்து நிறுத்த கோபி வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.

பிறகு உள்ளே வந்த ஈஸ்வரி நீ தப்பு மேல தப்பு பண்ற என்னால இதை ஏத்துக்கவே முடியாது. கோபி இந்த வீட்ல இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் என கூறுகிறார். ஆனா நீ பிடிவாதமா நீ நெனச்சத சாதித்து விட்டாய்? திரும்பவும் கோபி இந்த வீட்டுக்குள்ள வர வரைக்கும் நீ என்கிட்ட பேசாத நானும் உன்கிட்ட பேசமாட்டேன் என கூறுகிறார். செழியன் இப்போ உங்களுக்கு சந்தோஷமா நிம்மதியா இருங்க என சொல்லிவிட்டு மேலே செல்கிறான். இனியா எனக்கு அப்பனா ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்கும்போது அவரை ஏன் வெளியே அனுப்பிட்டேன் எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை என சொல்லி அழுது கொண்டே மேலே செல்கிறார்.

ரோட்டுக்கு வந்த கோபி கடும் கோபத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் பிறகு தன்னுடைய நண்பர் சதீஷை வரவைத்து அவரிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் கொஞ்சம் பொறுமையாக இரு யோசித்து முடிவு பண்ணு என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி ராதிகா வீட்டுக்கு சென்று உன்னை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீ தான். நீயும் கைவிட்டாத என பேசுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.