பாக்கியாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என அவருடைய அம்மாவுக்கு வாக்கு கொடுத்துள்ளார் கோபி.
Baakiyalakshmi Episode Update 17.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியாவை பத்திரிகையாளர்கள பேட்டி எடுக்க வீட்டிற்கு வந்துள்ளனர். பிறகு பாக்யா மசாலா அரைக்கும் மிஷின் பக்கத்தில் நின்று போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
‘பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு
இந்த பக்கம் ராதிகாவை பார்க்க மயூவுடன் மருத்துவமனைக்கு சென்ற கோபி ராதிகாவிடம் பேசியும் அவர் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். இனிமே யார் வந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன். உங்க கூடவே தான் இருப்பேன் என கூறுகிறார் கோபி. அதன்பிறகு ராதிகாவின் அம்மா இங்கே வருகிறார். கோபி ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்று இருப்பதைப் பார்த்து அவர் கோபப்படுகிறார்.
பிறகு ராதிகாவின் அண்ணன் போன் செய்ய அதனை மயூவிடம் கொடுத்து அவரை வெளியே அனுப்பி விடுகிறார். நான் வீட்ல இல்லாததுனால மயூ உங்களுக்கு போன் பண்ணிட்டா. அதான் வந்துட்டேன்ல நீங்க கெளம்புங்க என கூறுகிறார். உடனே கோபி என்னால போக முடியாது. இனி நான் ராதிகாவை விட்டு எங்கேயும் போகமாட்டேன். எனக்கு இவங்க ரெண்டு பேரும் அவ்வளவு முக்கியம் என கூறுகிறார். உங்களாலதான் ராதிகாவுக்கு இந்த நிலைமை. ஏன் நீங்க சொல்றத புரிஞ்சிக்க மாட்றீங்க. நீங்க வந்துட்டு போங்க பின்னாடி உங்க வீட்ல இருந்து வந்து சத்தம் போடுவாங்க என கூறுகிறார்.
கோபி இனிமே எங்க வீட்டிலிருந்து யாரும் வர மாட்டாங்க. எனக்கு ராதிகாவும் மயூவும் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள்தான் புரிஞ்சிக்க மாட்றீங்க. என் குடும்பத்தை விட்டுவிட்டு வந்து விட்டால் உங்களுக்கு ஓகே தானே என கூறுகிறார். ராதிகாவுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். என் குடும்பத்தை விட்டு வந்து ராதிகாவை கல்யாணம் பண்ணிப்பேன் என வாக்கு கொடுக்கிறார். நான் சும்மா சொல்றேன் மட்டும் நினைக்காதீங்க, நான் நிச்சயமா ராதிகாவை கல்யாணம் பண்ணிப்பேன் என கூறுகிறார்.
இந்த பக்கம் பாக்கியா பேட்டி கொடுக்க முதலில் பயப்பட அவருக்கு எழில் ஆறுதல் கூறுகிறார். அதன்பிறகு பாக்க சூப்பராக பேட்டி கொடுக்கிறார். இது எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய கணவர் கொடுத்த சப்போர்ட் தான். நான் கேட்டதும் அவர் பிசினஸ் செய்ய சரின்னு சொன்னார். நான் நடந்து போய் டெலிவரி செய்கிறேன் எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்தார். அவர் இல்லனா என்னால எதுவுமே சென்றிருக்க முடியாது என பேட்டி கொடுக்கிறார். பாக்கியா பேட்டி கொடுத்து முடித்ததும் அனைவரும் அவரை பாராட்டுகின்றனர். இதனால் பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.