அமிர்தா வீட்டுக்குப் போய் அசிங்கப்பட்டு உள்ளார் எழில்.
Baakiyalakshmi Episode Update 08.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று அமிர்தா வீட்டிற்கு போன எழில் நிலா பாப்பாவை தூக்கி கொஞ்சி கொண்டு இருக்கிறார். அமிர்தாவின் அம்மா அவரை கூப்பிட்டு காபி போட்டு கொடுக்குமாறு கூறுகிறார். வெளியே வந்த அமிர்தாவிடம் அதெல்லாம் வேண்டாம் என எழில் சொல்ல அதுதான் வேணாம்னு சொல்கிறாரே என முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார். இதனால் குழப்பமான அமிர்தாவின் பெற்றோர் இவளுக்கு என்ன ஆச்சு என யோசிக்கின்றனர். அதன் பிறகு அமுதாவின் அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் சண்டையா எனக் கேட்கிறார். எங்களுக்குள்ள என்னப்பா சண்டை வரப்போகுது என எழில் சமாளித்து விடுகிறார்.
தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி
இந்தப் பக்கம் பாக்கியா அவரது அத்தை மற்றும் மாமாவுக்கு காபி எடுத்து வந்து கொடுக்கிறார். நீ குடிக்கலையா என அவருடைய மாமனார் கேட்க நான் அப்புறம் குடித்திருக்கிறேன் எனக் கூறுகிறார். பிறகு ஜெனியும் செழியனும் வெளியே செல்வதற்கு தயாராகி வருகின்றனர். சினிமாவுக்கு செல்வதாக கூறிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர். போகும்போது செழியன் நீதான் ஜெனியை எங்கும் கூட்டிட்டு போகலனு சொல்லிட்டு இருந்தேன் இப்போ வெளியே போறேன் உனக்கு சந்தோஷமா என கேட்டு விட்டு கிளம்புகிறார். இப்போ செழியன் ரொம்ப திருந்திட்டான் என பாக்கியா சொல்ல அத்தை மாமா இருவரும் ஆமாம் என சொல்கின்றனர்.
அடுத்ததாக ஆபீசில் எழில் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறார். சதீஷ் வந்து எடிட்டருக்கு போன் பண்ணியா என கேட்பது கூட தெரியாமல் சிந்தனையில் இருக்கிறார். பிறகு சதீஷ் உனக்கு பணம் பண்ணனும்றது எவ்வளவு ஆசை, ஆனா இப்போ பண்ண முடியுமான்னு தெரியல. இப்படியே இருந்தா நல்லது இல்ல அவங்க தான் பேசலல விட்டுத்தள்ளு என கூறுகிறார்.
இந்தப் பக்கம் பாக்கியா போனை வைத்துக்கொண்டு எவ்வளவு லைக் வந்திருக்கு என் எது என பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த இனிய உடனே வீட்டில் உள்ள அனைவரையும் கூட்டி வந்து சத்தமில்லாமல் பின்னாடி நிற்கிறார். ஜெனி எப்படியோ சொல்லிக் கொடுத்தாலே என தலையில் அடித்துக்கொண்டு பார்க்கிறார் பாக்கியா. பிறகு எழில் மா என்னமா பண்ணிட்டு இருக்க எனக் கேட்கிறார். எல்லோரும் பின்னாடி இருப்பதை பார்த்து ஷாக்கான பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.
Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்
பிறகு எழில் நீ பண்ண விளம்பரத்த என்னுடைய பேஜில் மட்டும் 25 ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க என கூறுகிறார். அதுமட்டுமல்ல என்னோட இதுல பத்தாயிரம் பேர் பார்த்து இருக்காங்க என ஜெனி கூறுகிறார். ஒத்தை இதுவரைக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உன்னோட வீடியோவை பார்த்து இருப்பார்கள் என சொல்கிறார்.
ஒரே நாள்ல இவ்வளவு பேரா? நான் ரொம்ப பிரபலம் ஆகி விட்டேன் என பாக்கியா வெட்கப்படுகிறார். பிறகு இரவில் தூங்கும் போது இனியாவை எழுப்பி எழுப்பி இதைப் பற்றி பேசி அவரை வெறுப்பேற்றுகிறார். இனியா போனை புடுங்கி வைத்து விட்டு தூங்கி விடுகிறார். பாக்கியா தான் பிரபலமானது நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.