கோபிக்கு ராதிகா குட் நியூஸ் சொல்ல வீட்டில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
Baakiyalakshmi Episode Update 04.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகாவின் வீட்டுக்கு போன கோபியை உள்ளே வரவேற்று உங்களை ரொம்ப மிஸ் செய்தேன் என கூறுகிறார். பிறகு வர எனக்கு பிறந்தநாள் என சொல்கிறார். உனக்கு என்ன வேணும் சொல்லு அங்கிள் வாங்கி தரேன் என கோபி சொல்ல எனக்கு ஒரே ஒரு டாய் மட்டும் போதும் என கூறுகிறார். பெருசா ஏதாவது கேளு என்ன கோபி சொல்லியும் இல்ல எனக்கு பிடித்தது வாங்கி தாங்க போதும் என மயூ கூறுகிறார்.
பிறகு மயூ ஹோம் வொர்க் செய்ய வேண்டும் என அவரது பாட்டி அழைத்துக்கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார். அதன்பிறகு ராதிகா கோபியிடம் உங்களுக்கு என்னாச்சு நாலு நாளா போன் கூட இல்ல நாங்க ரொம்ப பயந்து போய் விட்டோம் என கூறுகிறார். இதுல கொஞ்சம் உடம்புக்கு முடியல அங்க நான் தனியா இருந்ததுல ரொம்ப அப்செட் ஆயிட்டேன் என சொல்கிறார். இங்க வந்துட்டு இருக்கலாமே என சொல்ல உனக்கு எதுக்கு கஷ்டம் தான் வரல போன் பண்ணல என சொல்கிறார். நாம தான் இப்போ ஃபேமிலியாக ஆக போறோமே, இப்பவும் எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க என ராதிகா சொல்கிறார். பிறகு ராதிகா இன்னைக்கு கோர்ட்டுக்குப் போய் இருந்தேன். டிவேர்ஸ் கிடைச்சிடுச்சி இனிமே ராஜேஷ் தொல்லை இருக்காது சந்தோஷமா இருக்கு நிம்மதியா இருக்கு என கோபியை கட்டி அணைத்துக் கொள்கிறார். நீங்களும் வந்துட்டார் இன்னும் சந்தோஷமா இருக்கும் என ராதிகா சொல்ல கண்டிப்பா வர தான் போறேன் என கோபி கூறுகிறார்.
அதன் பிறகு வீட்டில் இந்தப்பக்கம் கோபியின் அப்பாவை சோபாவில் அமர வைத்துவிட்டு பேரப்பிள்ளைகள் கேரம் போர்டு விளையாடுகின்றனர். அதற்கு உடம்பு வலியால் கஷ்டப்பட அவரை அழைத்துக் கொண்டு பெட்டில் படுக்க வைத்து விடுகின்றனர். தாத்தாவுக்கு ஒரு வீல்சேர் வாங்கணும் என ஈஸ்வரி சொல்ல அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி அதெல்லாம் தேவையில்லை என செழியன் சொல்கிறார். இதனால் ஈஸ்வரி கண் கலங்குகிறார். செழியன் சென்றதும் பாக்கியா அவன் கெடக்குறான் விடுங்க அத்தை வாங்கிக்கலாம் என சொல்கிறார்.
அதன்பின்னர் எழிலிடம் பாக்கியா வீல்சேர் எவ்வளவு இருக்கும் என கேட்கிறார். அதெல்லாம் ரொம்ப கம்மிதான் என எழில் சொல்ல நான் காசு தரேன் தாத்தாவுக்கு ஒன்று வாங்க வேண்டும் என கூறுகிறார். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் விடுமா என எழுதி சொல்லும் நேரத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார். அவர் கையில் வீல் சேரை வாங்கிக் கொண்டு வருகிறார்.
இதனை பார்த்துவிட்டு எல்லோரும் நன்றாக இருக்கிறது என கூறுகின்றனர். மேலும் ஜெனி தாத்தா இன்னைக்கு பேசினார் அவர் பேசினது எங்களுக்கு புரிந்தது என சொல்ல கோபி அதிர்ச்சியாகிறார். உடனே என்ன பேசினார் என கேட்க இனியானு சொன்னாரு என சொன்னதும் தான் அவர் நிம்மதி ஆகிறார்.
அதன் பின்னர் கோபியின் அப்பாவே அந்த வீல் சேரில் அமர வைத்து எழில் ஈஸ்வரி மற்றும் வாக்கிய ஆகியோர் வெளியில் கூட்டிச் செல்கின்றனர். பிறகு மறுநாள் காலையில் ஜெனி கோபிக்கு காபி போட்டுக் கொடுக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் வந்த ஈஸ்வரி நைட்டெல்லாம் அப்பா தூங்கவே இல்ல விட்டத்தை பார்த்துகிட்டு முழிச்சுக்கிட்டே இருந்தாரு ரொம்ப கஷ்டமா இருந்தது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் பிசியோதெரபி மருத்துவ கோபியின் அப்பாவே பரிசோதனை செய்துவிட்டு ஈஸியா குணப்படுத்தலாம் என கூறுகிறார்.