போலீசில் புகார் அளித்ததால் பாக்கியாவை பல்வேறு பிரச்சனைகள் சுற்றி வளைத்துள்ளன.
Baakiyalakshmi Episode Update 03.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியாவின் தோழி பிரச்சினை பற்றி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த அவரை கோபி, செழியன் மற்றும் அவரது மாமியார் என அனைவரும் திட்டித் தீர்த்தனர். இதனால் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வரும் என கோபி திட்டுகிறார். கோபியின் அப்பா மட்டுமே நடந்தது நடந்துடுச்சு இனி வருவதைப் பார்க்கலாம் என சப்போர்ட் செய்கிறார்.
பிறகு பாக்கியா இரவில் எழிலிடம் அப்பா சொன்ன மாதிரி எல்லாம் நடக்குமா என கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் நடக்காது நீ பயப்படாத என ஆறுதல் கூறுகிறார். நீ பண்ணது நல்ல விஷயம் தான் என கூறுகிறார். மறுநாள் காலையில் எழிலும் ஈஸ்வரியும் அமர்ந்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் வந்து இது பாக்கிய லட்சுமி மேடம் வீடு தானே. அவர்களிடம் பேச வேண்டும் என கூறுகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் கூடி விட அதெல்லாம் பேச முடியாது என சொல்கின்றனர். பாக்கியம் இடம் பேச முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இனியாவிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் எனக் கேட்கின்றனர்.
கோபி அவர்களிடம் சத்தம் போட்டு அனுப்பி வைக்கிறார். பிறகு வெளியே வந்த பாக்கியா நான்தான் பாக்கியலட்சுமி. பேச வேண்டியது எல்லாம் அங்கு பத்திரிக்கையாளர்கள் இடமும் போலீசிடம் சொல்லி விட்டேன் இனி பேசுவதற்கு எதுவுமில்லை தயவுசெய்து நீங்க கிளம்புங்க என சொல்லி அனுப்புகிறார். பிறகு கோபி மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் எஸ்பி ஆபிசிலிருந்து போன் கால் வருகிறது.
இனியாவிடம் ஒரு சிறிய விசாரணை நடத்த வேண்டும் அவரை பள்ளிக்கு அழைத்து வாங்க என கூறுகின்றனர். கோபி சரி எனக் கூறி போனை வைத்து விட்டு பாக்கியாவை திட்டுகிறார். அதன்பிறகு பாக்கியாவை போன் பெற அதனை எழில் அட்டெண்ட் செய்து பேசுகிறார். பாக்கியம் இடம் முன் சிறிய விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் பள்ளிக்கு அழைக்கிறது. பாக்கியா குழந்தைகளோட பெயர் எந்த பத்திரிக்கையிலும் வராது அல்லவா எனக் கேட்கிறார். பிறகு பாக்கியா உடன் எழில் நான் சென்று வருகிறேன் என கூறுகிறார். உடனே கோபி நீ போன் அதனாலதான் அவ ஹீரோயின் மாதிரி அங்க நடிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னைக்கு நீ ஒன்னும் போகத் தேவையில்லை நான் நீ என் பொண்ண கூட்டிட்டு போகிறேன் என சொல்கிறார். பாக்கியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.