அமிர்தா சொன்ன வார்த்தைகளால் அதிர்ச்சியில் உள்ளார் எழில்.
Baakiyalakshmi Episode Update 02.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மருத்துவமனையில் எழில் அமிர்தாவிடம் ஐ லவ் யூ என சொல்ல அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுக்காகத்தான் எனக்கு உதவி பண்ணீங்களா? இதுக்காகத்தான் என் அப்பா அம்மா கிட்ட பேசினீங்களா என கேட்டார். அப்படி எல்லாம் இல்லை என எழில் சொல்லியும் அமிர்தா கேட்கவில்லை. உடனே அமுத அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய அம்மா எழிலுக்கு போன் செய்கிறார்.
எழில் போனை எடுக்க அவர் குழந்தை பற்றி நலம் விசாரிக்க பாப்பா நன்றாக இருப்பதாக கூறுகிறார். கொஞ்ச நேரம் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விடுவோம் என சொல்கிறார். மீண்டும் அமிர்தாவிடம் சென்று எழில் பேச அவர் பேச மறுத்துவிட்டார். பிறகு இந்த நேரத்தில் பாக்கியா போன் செய்து எங்கே இருக்கே என கேட்க எழில் மருத்துவமனையில் இருப்பதாக கூறுகிறார். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என சொன்னதும் அவர் அமிர்தாவிடம் போனை கொடு நான் பேசுகிறேன். அவ பதறி போய் இருப்பார் என சொல்கிறார். பிறகு எழில் அமுதாவிடம் போனை எடுத்துக் கொண்டு செல்ல முதலில் தயங்கிய அமிர்தா பின்பு வாங்கி பேசுகிறார்.
பிறகு மூவரும் வீட்டிற்கு வருகின்றனர். அமிர்தா குழந்தையை கூட்டிக் கொண்டு ரூமிற்கு சென்று விடுகிறார். அவருடைய அப்பா அம்மா எழிலுக்கு நன்றி கூறுகின்றனர். பிறகு மாத்திரையை அமிர்தாவின் அப்பாவிடம் கொடுக்க அவர் நீயே உள்ளே கொடுத்துவிட்டு சொல்லிட்டு போ என கூறுகிறார். பிறகு ரூமிற்குச் சென்று மாத்திரையை கொடுத்த நான் போயிட்டு வரேன் என சொல்லியும் அமிர்தா அமைதியாகவே இருக்கிறார். இதனால் மன கஷ்டத்தோடு அங்கிருந்து கிளம்புகிறார் எழில்.
மறுநாள் காலையில் எல்லோரும் அமர்ந்து கொண்டே இருக்க பாக்கியா தனக்கு வந்த லாபம் பற்றி கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார். செல்வி எனக்கு லாபத்தில் 50% வேண்டும் என கேட்கிறார். நஷ்டம் ஏற்பட்டாலும் அதில் 50 சதவீதத்தை செல்வி ஏற்றுக்கொள்ள வேண்டுமென பாக்யாவின் மாமனார் கூற செல்வி என்னங்கய்யா இது என கூறுகிறார். பிறகு பாக்கியா எழில் சோகமாக இருப்பதை கவனிக்கிறார். என்னடா ஒரு மாதிரி இருக்கே என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லை அம்மா என கூறுகிறார் எழில். ஈஸ்வரி பார்ட்டியும் என்னாச்சு உடம்புக்கு ஏதாவது முடியலையா என கேட்கிறார். நைட் எத்தனை மணிக்கு வந்த எனக் கேட்கிறார். காலைலதான் வந்தான் அத்தை என பாக்யா கூறுகிறார். எனக்கு இது தான் பிடிக்கல என ஈஸ்வரி பாட்டி கூறுகிறார். பிரெண்டா இருந்தா எப்படி ஆச்சு உதவி பண்ணலாம் எப்பவும் கூட இருக்கணும்னு இல்ல என சொல்கிறார். குழந்தைக்கு உடம்பு முடியல அப்படியே விட்டுட்டு எப்படி வரமுடியும் என எழில் சொல்கிறார். திரும்பத் திரும்ப பாக்கியா பிரச்சினை ஏதும் இல்லையே என கேட்கிறார். ஒரே ஒரு டீ போட்டு கொடுமா சரியாகி விடும் என கூறுகிறார்.
பிறகு ஜெனி கிச்சனில் காஃபி போட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் செழியன் அங்கு வருகிறார். என்ன பண்ற எனக் கேட்க உனக்கு தான் காப்பி போடுகிறேன் என காபி போட்டு கொடுக்கிறார். உனக்கு எதுக்கு வராத வேலையெல்லாம் செய்கிற செழியன் சொல்ல நீ வெயிட் பண்ணி பாரு நான் எப்படி போடுறேன்னு என கூறிவிட்டு காபி போட்டு கொடுக்க செழியன் அதை பயந்து கொண்டே குடிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.